Friday, December 31, 2010

யூதர்களையும் கிறிஸ்த்துவர்களையும் பின்பற்றாதீர்


துபை மண்டல தமுமுக சார்பாக இவ்வாரம் ஜும்மா தினத்திற்கான நோட்டிஸ்

Wednesday, December 29, 2010

சட்டமன்ற தேர்தல் குறித்து செ.ஹைதர் அலி பேட்டி


தென்காசி: 27.12.2010 தமிழக சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.

தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசியில் நிருபர்களிடம் பேசுகையில்,

முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு செல்ல ரிங் ரோடு சரியாக இல்லை. தென்காசி மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

தற்போது வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதியாக 25 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். அதில் கடையநல்லூர், பாளை தொகுதிகளும் அடங்கும்.

ஆனால் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அவர்.

அச்சன்புதூரில் தமுமுகவின் பொதுக்கூட்டம்



திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரில் (26.12.2010) அன்று தமுமுகவின் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் எம். பீர் மைன் தலைமை தாங்கினார்.

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது, மாவட்டப் பொருளாளர் சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது - ஜவாஹிருல்லா


பெரியபட்டினம் படகு விபத்தில் பலியானவர்களுக்கு அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது,'' என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பெரியபட்டினம் விபத்துக்கு மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பாகும். மீனவர்கள் தான் அனைவரையும் மீட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசு இயந்திரம் செயல் இழந்துவிட்டது. இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது போதாது. தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை திருப்தியளிப்பதாக உள்ளது. குற்றசாட்டுகள் வரும் போது அதில் பாரபட்சம் தேவையில்லை. தேவைபட்டால் கருணாநிதியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தலாம். அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு சாதகமாக கருதப்படும் தொகுதிகளை கேட்போம், என்றார்.

-தினமலர்-

Monday, December 27, 2010

பெரியபட்டினம் படகு விபத்து 6ஆம்புலென்சுகளுடன் தமுமுக நிவாரணப் பணி


ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் டிசம்பர் 26 அன்று நடந்த படகு விபத்தில் 16பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி எங்கள் வேதனையை அதிகப்படுத்துகிறது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.



விபத்துப் பற்றிய செய்தி அறிந்து உடனே 6ஆம்புலென்சுகளுடன் அங்குச் சென்று நிவாரணப் பணிகளை இராமநாதபுரம் (கிழக்கு) தமுமுக செய்துள்ளது.

அப்பகுதி பவளப்பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், கடலோர காவல் படையின் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.

இச்சூழலில், அனுமதியின்றி அருகில் உள்ள அப்பா தீவுக்கு சுற்றுலா செல்ல மக்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்விக்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த பலர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்,போதிய முதலுதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு விபத்து பற்றிய செய்தி உடனடியாக தெரிவி்க்கபட்டப் போதினும் அரசின் மருத்துவ மற்றும் மீட்புக் குழு தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ குழு அங்கு வந்து முதலுதவி செய்திருந்தால் பல உயிர்களை காப்பற்றியிருக்கலாம்.

தமிழக அரசு இந்த விபத்தில் உயிர் இழந்த 15பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு ரூ1 இலட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
.

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி



ராமநாதபுரம்.26:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் உள்ள தீவுக்கு படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் பெரிய
பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித்
தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும்
மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகும்
ஈடுபடுத்தப்பட்டது.இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
அவர்கள் அனைவரும் பெண்கள். மீட்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறது.கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக
யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

Friday, December 24, 2010

தொண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமுமுக மற்றும் ம.ம.க இணைந்து தொண்டியில் டிசம்பர் 4 அன்று நகர தமுமுக தலைவர் முகம்மது சாதிக் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு பயனடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் 42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியன இணைந்து புதுவலசை கிராமத்தில் அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு ம.ம.க மாவட்டச் செயலாளர் எஸ். சலிமுல்லாகான் தலைமையில் 11.12.2010 அன்று நடைபெற்றது. புதுவலசை ஜமாஅத் தலைவர் ஷேக் முகம்மது, செயலாளர் ஜகுபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சந்தீப்குமார், டாக்டர் பூஜா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் சிகிச்சையளித்தனர்.

42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, ஊராட்சி மன்றத் தலைவர் ஆயிசாமரியம், அரபி ஒலியுல்லா பள்ளியின் தாளாளர் லியாகத் அலிகான் மற்றும் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, December 22, 2010

பள்ளப்பட்டி:அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த சமுதாயம்!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராகும். இந்தப் பகுதியை சில சமூகவிரோதிகள் விபச்சார பகுதியாக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க பள்ளப்பட்டி மக்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளர் அபுதாஹிர், ஒரு குடும்பப் பெண்ணுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்தது நேரடியாக பெண் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண் வீட்டாரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 12.12.2010 இரவு சுமார் 9 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தகாத உறவுக்காக (விபச்சாரத்திற்காக) அதிமுக நகர செயலாளருக்காக வந்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும் ஷாஜஹான், கண்ணன் ஆகியோர்தான் தங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினர் என்றும் கூறியுள்ளனர்.

இதில் ஷாஜஹான் என்ற நபர் தற்போது ஊரில் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோபம் கண்ணன் மேல் திரும்பியது. கண்ணன் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர். இவர் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே ‘கௌரி மெஸ்’ என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறார். கடையின் பின்புறம் கண்ணனின் குடும்பம் உள்ளது.



பொதுமக்கள் கண்ணனின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவரும், சமுதாய நலன் விரும்பிகளும் அவர்களைத் தடுத்துள்ளனர். இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கண்ணனைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

மறுதினம் 13.12.2010 அன்று இது சம்பந்தமாக, பள்ளப்பட்டி உலமாக்கள் சபை மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அழைப் பின் பேரில் அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், தவறான பாதையில் பிடிபட்ட பெண்களை ஜமாஅத் மூலமாக நடவடிக்கை எடுப்பது என்றும், அந்தப் பெண்களிடம் தகாத நட்பை வைத்திருந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கும் போதே பொதுமக்களில் சிலர் அதிமுக நகர செயலாளர் அபுதாஹிரின் மருந்துக்கடையையும், அதன் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது அத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்த முஹம்மது ஹக்கீம், இக்பால் ஆகிய இரண்டு தமுமுக உறுப்பினர்களை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தகவல் அறிந்தவுடன் தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்றனர். அங்கு ஆய்வாளர் இல்லாத நிலையில் அவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு தமுமுக உறுப்பினர்களை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இரண்டு பேரையும் விசார ணைக்காக அழைத்து வந்ததாகவும், அவர்களை விடுவித்து விடுவோம் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் போலீசார் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஐந்து பேரை பிடித்துச் சென்றனர். மேலும் பலரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் கரூர் மாவட்ட தமுமுக பொறுப் பாளரும் மாநில துணைச் செயலாளருமான கோவை சாதிக் அவர்களை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து விரிவாகக் கூறினர். மாநில துணைச் செயலாளர், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.



இதையடுத்து 14.12.2010 அன்று காலை 11 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த தமுமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து தமுமுக போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பள்ளப்பட்டி பொதுமக்கள், பள்ளப்பட்டியின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து கடைகளையும் அடைத்தனர். பள்ளப்பட்டியில் தமுமுக நிர்வாகிகள் தலைமையிலான சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையும், சாலை மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை, நள்ளிரவில் கைது செய்த ஐந்து நபர்களையும் உடனடியாக விடுதலை செய்தது. தமுமுக உறுப்பினர்களை விடுதலை செய்வதாக உறுதியளித்தது.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமுமுக நிர்வாகிகள் மீது கோபடைந்த காவல்துறை அதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்த முஹம்மது ஹக்கீம் மற்றும் இக்பால் ஆகிய இருவர் மீதும், இந்து முன்னணியைச் சேர்ந்த கண்ணன் வீட்டை தாக்கியதாகவும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைப்பட்ட இருவரையும் ஜாமீனில் எடுப்பதற்கான பணிகளில் தற்போது பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tuesday, December 21, 2010

அபுதாபி சனையாவில்- தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகம

10-12-2010 அன்று அபுதாபி சனையாவில் த மு மு க புதிய நிர்வாகிகள் தேர்வு மண்டல செயலாளர் சகோ.கீழை.இர்பான் தலைமையில் நடைபெற்றது அதில் புதிய நிர்வாகம்அமைக்கபட்டது.

தலைவர் : பீர் முஹம்மது – வாலி நோக்கம்

செயலாளர் : கே.எஸ். நஜ்முதீன்-சென்னை

பொருளாளர் : அப்துல் ரகுமான் - மண்டபம்

துணைச்செயலாளர் : இஸ்மாயில்-திருநெல்வேலி

துணைச்செயலாளர்: சாகுல்- சென்னை

செயல் குழு உறுப்பினர்கள் : முஹம்மது சல்மான்- இளையான்குடி , இப்ராகிம் பாதுஷா- தென்காசி, சுபைர் அலி- அத்திஉத்து

மக்கள் தொடர்பாளர் : இம்ரான்-மேலப்பாளையம்

தேர்தல் அதிகாரிகளாக அபுதாபி நகர தலைவர் தோப்புத்துறை ரசூல் முஹம்மது மற்றும் சகோ.உஸ்மான் ஆகியோர் பணியாற்றினார், அதனை தொடர்ந்து வாரந்திர பயான் நடைபெற்றது.

Wednesday, December 15, 2010

முதுகுளத்தூர் த.மு.மு.க., கூட்டம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் த.மு.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் நசிம் தலைமையில் நடந்தது. ஏர்வாடியில் தெருக்களில் ரோடு, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர பலமுறை முறையீடு செய்தும், நடவடிக்கை எடுக்காததால், டிச. 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சம்சுதீன்சேட், செயலாளர் சகுபர்சாதிக், துணை செயலாளர் அஜிஸ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களை இழிவுபடுத்திய காவல்துறையை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்


திவிரவாதிகள் தாக்குதலில் இருந்து போலீசார் எவ்வாறு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து திண்டுக்கல்லில் போலீசார் ஒத்திகை நடத்தும் நிகழ்ச்சி டிசம்பர் 09, 2010 அன்று நடந்தது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது போலவும், தபால் நிலையத்தில் பதுங்கிக் கொள்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதி களாக சித்தரிக்கப்பட்டவர்கள் தாடி வைத்த முஸ்லிம்கள் போன்ற தோற்றத்தை போலீசார் அமைத்திருந்தனர். இந்த செய்தி மறுதினம் புகைப்படத்துடன் வெளிவந்தது. புகைப்படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாயினர். போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி தங்களை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, திண்டுக்கல் பேகம்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்தவர்கர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

உயர் அதிகாரிகள் வருத்தம்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், முருகன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட வில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்.சிவானந்தம், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் வந்து சமரசம் செய்தனர். இறுதியில் போலீஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மதுரை செல்லும் வாகனங் கள், திண்டுக்கல்லுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியல் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங் கியது.

தமிழக காவல்துறையின் இந்த செயலுக்கு தமுமுக தலைவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது..

“தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல் துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டை யாடுவதாக போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதி களைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந் துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதி களுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்தரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.


சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர் களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பது போல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்கச் செய்து பத்திரிகை களில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர் வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந் தப் படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக் கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்ப தாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம் களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள் ளதற்கு தமுமுக வன்மையான கண்டனத் தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.”மேற்கண்டவாறு தனது அறிக்கையில் தமுமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, December 13, 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.


போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.


சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.


உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?


தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Tuesday, December 7, 2010

கீழக்கரை தமுமுக சார்பாக பெரியபட்டணம் தமுமுக க்கு பிரிகேர் பாக்ஸ் வழங்கப்பட்டன

5/12/2010 அன்று கீழக்கரை தமுமுக சார்பாக பெரியபட்டணம் தமுமுக க்கு பிரிகேர் பாக்ஸ் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை செய்யது தலைமை வகித்தனர், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி, டிச. 6: த.மு.மு.க., ம.ம.க தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, டிச. 6: பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மு.சம்சுதீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் அப்துல்லா சேட், எஸ்.தாஜ் மஹம்மது, ஏ.சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை அப்துல் ஹக்கீம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து டி.ஐ.பி. மாநில செயலாளர் பூ.சந்திரபோஸ், மராக்சிய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்குமார், காசிநாததுரை, த.மு.மு.க மாநில பேச்சாளர் வாணி சித்திக் ஆகியோர் பேசினர்.
பாபர் மசூதி வழக்கில் லிபரான் கமிஷன் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கு நடைபெறும் ராய் பரேலி நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தக்கோரியும், பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், பரமக்குடி நகர் மத்தியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் உழவர் சந்தைப் பகுதியில் கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அகற்றக் கோரியும், மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடக் கோரியும், நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதார சீர்கேட்டை தவிர்க்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ், துணைச் செயலாளர் இலியாஸ், மாவட்ட ம.ம.க. செயலாளர் ஜபருல்லா, மருத்துவ அணி செயலர் எஸ்.சேக் அப்துல்லா உள்பட நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகர் தலைவர் அகமது கபீர் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் த.மு.மு.க. தொடர் முழக்கப் போராட்டம்

ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திங்கள்கிழமை 3 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமுமுகவின் மாவட்ட தலைவர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்டப் பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை செய்யது, போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர் முழக்கப் போராட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.ஞானவாசகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முருகபூபதி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் அஜ்மல் கான், துணைச் செயலாளர் பீர் முகம்மது ஆகியோர் உள்பட அமைப்பின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ராய் பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும், அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஏற்பாடுகளை தமுமுக மாவட்ட செய்தி தொடர்பாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Thursday, December 2, 2010

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ. 29: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பாளையங்கோட்டையில் தமுமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. மைதீன் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.எஸ். காசீம் பிர்தவ்ஸி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் கே.எஸ். ரசூல் மைதீன், பொருளர் ஏ.ஆர். சர்தார் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு, பெண் மருத்துவர்களே ஸ்கேன் எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் தேவையான மின் விளக்கு, சாலை வசதி, கணினி முன்பதிவு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும். மழையினால் சேதமடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் காஜா அலாவுதீன், துணைச் செயலர்கள் செய்யது, முஜிப், மைதீன், மருத்துவ சேவை அணி செயலர் சேக் மைதீன், தொண்டரணி அப்பாஸ், இளைஞரணிச் செயலர் ஜமால், மனிதநேய வணிகர் சங்கச் செயலர் லியாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமணி

இந்தவாரம் ஷார்ஜா தமுமுக மர்க்கஸீல்

Saturday, November 27, 2010

கீழக்கரையில் ஏடிஎம் மையங்கள் அடிக்கடி மூடல்: பொதுமக்கள் அவதி

கீழக்கரை,நவ. 24: கீழக்கரையில் அடிக்கடி ஏடிஎம் மையங்கள் மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி,
ஐசிஐசிஐ வங்கி, பாண்டியன் வங்கி, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு வங்கியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையங்களைச் சார்ந்தே செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளை மட்டும் வழங்கி விட்டு ஏடிஎம் மையங்கள் அமைக்காமல் உள்ளன.
இதுசம்பந்தமாக பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேல் கூறியதாவது:
கீழக்கரையில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் ஏடிஎம் மையத்தில் இருக்கும் பேட்டரி 30 நிமிடங்கள் மட்டுமே வேலைசெய்வதாலும், எங்களது கிளையின் மூலமாக குறிப்பிட்ட தொகை மட்டுமே வைப்பதற்கு அனுமதி இருப்பதாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
இது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.ஐசிஐசிஐ வங்கி கிளஸ்டர் மேலாளர் ரங்கராஜ் கூறியதாவது: மின்சாரம் தடைபட்டவுடன் 30 நிமிடங்கள் மட்டுமே ஏடிஎம் இயந்திரம் வேலைசெய்கிறது என்று எங்களது கிளையின் சார்பாக தலைமைஅலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து விட்டோம். இரண்டு நாள்களில் சரியாகிவிடும் என்று கூறினார்.

Thursday, November 25, 2010

டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று எனது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: ”இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிகு பாப்ரி பள்ளிவாசல் 1992 டிசம்பர் 6 அன்று மதவெறி கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.பாப்ரி பள்ளிவாசல் நிலம் தொடர்பாக சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயவான்களால் விமர்சிக்கப்பட்டு தற்போது அது உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது.அதேநேரம் பாப்ரி பள்ளிவாசலை இடித்தது தொடர்பான வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து அமைக்கப்பட்ட -பர்ஹான் ஆணையம், அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.இந்நிலையில் 1995 முதல் கடந்த 16 ஆண்டுகளாக தமுமுக தமிழகத்தில் ஜனநாயக வழியில் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது.அதேபோல் இவ்வருடம் உச்சநீதிமன்றம், 1) பாப்ரி பள்ளிவாசலை இடித்த லிபர்ஹான் ஆணையம் சுட்டிக்காட்டிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2) அத்வானி உள்ளிட்ட பாப்ரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், 3) பாப்ரி பள்ளிவாசல் இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வ-யுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் (தர்ணா) நடைபெறவிருக்கிறது.இந்த தர்ணா போராட்டத்தில் முஸலிம்கள் மட்டுமின்றி, மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் பங்குகொண்டு கண்டன உரைகள் வழங்குவார்கள்.

Wednesday, November 24, 2010

தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

சகோதரர். உமர் இரத்ததானம் செய்யும் பொழுது

தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.


தமுமுக துபை மண்டலத்தின் இந்த வார நிகழ்ச்சிகள்
















Monday, November 22, 2010

த மு மு க __ம ம க கோட்டையான கடலுர் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளின்

காயல்பட்டணத்தில் தமுமுக - மமக பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று (20 நவம்பர்) காயல்பட்டணத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார்

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1 செந்தூர் எக்ஸ்பிரசை சென்னைக்கு தினசரி கார்டு லைனில் இயக்க வேண்டும்

2 நிதி ஒதுக்கீடு செய்யப்பட இரண்டாம் பைப் லைன் திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
3 இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காயல்பட்டண நகராட்சிக்கு போதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படவேண்டும்
4 புதிய பேருந்து நிலையம் அருகில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்கள் கட்ட இடங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்பும் வாடகை கட்டிடங்களில் இயங்கிவருவது வேதனைக்குறியது. உடனடியாக இங்கு கட்டிடங்கள் கட்டப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

Sunday, November 21, 2010

திருப்பூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கூட்டம்

திருப்பூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாக கூட்டம், மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அன்சார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு கோம்பைத்தோட்டம், சொர்ணபுரி லே-அவுட் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில், சாக்கடை கால்வாய், சாலை பணிகள் துவங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். "அனைத்துக்கட்சி கூட்டங்களில் சிறுபான்மையினரை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நெருங்க உள்ள நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை தலைவராக பஷீர், துணை செயலாளராக சாதிக், மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளராக மீரான் நியமிக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் இக்பால் நன்றி கூறினார்.

Source: Dinamalar

துபை தமுமுக மர்கஸில் இஸ்லாமிய நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-11-2010 வெள்ளிக்கிழமையன்று துபை தமுமுக மர்கஸில் சகோ.இப்ராஹிம் அவர்கள் அற்ப உலகமும் அற்புதமான மறுமையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்த அமர்வில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

Thursday, November 18, 2010

32 புனித ஹஜ் யாத்ரீகர்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியது

ராமல்லா,நவ.14:சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்களான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றப்பட்ட 32 பேரை இஸ்ரேலிய ராணுவம் தடுத்துள்ளது.ஜோர்டானுக்கும் மேற்குகரைக்குமிடையே அலன்பி பாலத்தில் காவலுக்கு நிற்கும் இஸ்ரேலிய ராணுவத்தினர் புனித யாத்ரீகர்களிடம் திரும்பிச் செல்லுமாறு கூறினர்.சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதை இஸ்ரேலிய ராணுவம் தடுக்காது என இஸ்ரேலிய சிவில் விவகார அமைச்சகம் அறிவித்திருந்தது என ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளுக்கான அமைச்சர் ஈஸா கராகி தெரிவித்துள்ளார்.பிரச்சனையை பரிசீலிக்க பலரையும் தொடர்புக்கொண்ட பொழுதும் பயனில்லை என அவர் தெரிவித்தார்.சவூதி ஆட்சியாளரான மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதில் உட்பட்ட 32 பேரைத்தான் இஸ்ரேலிய ராணுவம் அராஜகமாக தடுத்துள்ளது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, November 17, 2010

மேலப்பாளையத்தில் பெருநாள் திடல் தொழுகை.




இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக பெருநாள் தொழுகை இன்று 17 -11 -2010 ,காலை நடைப்பெற்றது,மௌலவி அப்துல் காதர் மிஷ்பாஹி அவர்கள் தொழுகை நடத்தினார்கள்,
தொழுகைக்குப் பின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி j .s .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், தனது உரையில் ஹஜ் பெருநாளின் சிறப்புகளை குறித்தும் இப்ராஹிம்(அலை)அவர்களின் தியாகம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்,நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மேலப்பாளைய நகர நிர்வாகிகள் முஸ்லிம் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்,தொழுகைக்கான ஏற்பாடுகளை நகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள், தொழுகைக்குப் பின் மேலப்பாளைய நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே .
நெல்லை மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக கடையநல்லூர்,புளியங்குடி ஆகிய பகுதிகளிலும் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்.மாவட்டத்தில்

காரைக்ககால் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


காரைக்கால் நகராச்சியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் நகராச்சி நிர்வாகம் சீரழிந்து மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காரைக்கால் நகர பகுதி சாலைகள் செப்பனிடப்படாமலும், சாக்கடைகள் உடைந்து கழிவு நீர் தேங்கி நிற்பதும், குப்பைகள் சுத்தம் செய்யபடாமலும், கொசுக்கள் அதிகரித்து வியாதிகள் அதிகமாகவும் உள்ளன, மேலும் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகள் பராமரிக்கப்படாமலும் உள்ளன. ஆகவே, பிரச்சனைகளை தீர்க்க வழி வகுக்காமல் நிர்வாகம் செய்து வரும் நகராச்சி நிர்வாகத்தையும், அதனை உரிய முறையில் வழி நடத்தாமல், நகராச்சியில் இருந்து அனுப்பும் கோப்புகளுக்கு சரியான பதில் அளிக்காமலும் உள்ள புதுச்சேரி உள்ளாட்சித்துறை நிர்வாகத்தை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் நகர சார்பாக காரைக்கால் நகராச்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் A.அக்பர் ஷா தலைமை வகித்தார், த.மு.மு.க மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட துணை செயலாளர் A .அப்துல் நாசர், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.நெய்னா முகமது, மாவட்ட மனித நேய தொழிற்சங்க செயலாளர் H.M.இக்பால், காரை நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் A.லியாகத் அலி,மாவட்ட செயலாளர் S.T.ஆரிபு மரைக்கார், த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் M.A. ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். கண்டன ஆர்ப்பாட்டதில் த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக், மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது, மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் M.முகமது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், நகர மனிதநேய தொழிற்சங்க செயலாளர் S.ஜெஹபர் சாதிக், நகர மனிதநேய வர்த்தகர் சங்க செயலாளர் S.முகமது இஸ்மாயில், நகர வார்டு தலைவர் A.ஜாகிர் ஹுசைன், M.ஹாஜா பாருக், A.பைசர் ரஹ்மான், S.அப்துல்காதர், நகர வார்டு செயலாளர் M.காதர் சாஹிப் , M.சுல்தான் அப்துல்காதர், J.முகமது அசனுதீன், S.முகமது இப்ராகிம், P.ஹாஜா மொய்தீன் முன்னால் மாவட்ட மனித உரிமை அணி செயலாளர். உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்கால் நகர பொருளாளர் H .ஹசனுதீன் நன்றி கூறினார்

Tuesday, November 16, 2010

சென்னை , மேலப்பாளையம், கோவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பெருநாள் திடல் தொழுகை!!!

சமுதாய சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தாவா பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் தியாகத் திருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் பிராட்வேயில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் உள்ள திடலில் நடைப்பெறுகிறது, , பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, சென்னையில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


மேலப்பாளையத்தில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 7 :30 , மணியளவில் பஜார் திடலில் தொழுகை நடைப்பெறுகிறது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி J .S .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்திகிரார்கள்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, மேலப்பாளையத்தில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கோவை செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது கோவை சையது அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது
கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள JK கர்டன் திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது சகோதரர் ரெக்ஸ் ரபி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் தியாகத் திருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக நடைப்பெறுகிறது.

Friday, November 12, 2010

மன்னிப்புக்கோரும் வரை இஸ்ரேலுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும்: அர்தூகன்

கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Source: inneram

ப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Source: inneram

Wednesday, November 10, 2010

தமுமுக ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, கர்ப்பிணியின் சாவுக்கு காரணமாய் இருந்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்

கடந்த ஜூன் 24-ம் தேதி புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்நத ஜமீலா பீவி பிரவசத்திற்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் ஜமீலா பீவியும், குழந்தையும் இறந்தனர்.இதனையடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட், தமுமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.இதையடுத்து இறந்த ஜமீலா பீவியின் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதியின் உத்தரவுபடி கலெக்டர் ஜெயராமன் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். இதைத் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்த டாக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார நலத்துறை கண்காணிப்பாளர் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.அதன்பேரில் கடந்த 4-ம் தேதி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் கற்பகராஜ், சித்திரா சங்கரேஸ்வரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு கடிதம் தென்காசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Monday, November 8, 2010

பொட்டல்புதூரில் தமுமுகவின் 90வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.

பொட்டல்புதூரில் நடந்த விழாவிற்கு த.மு.மு.க., கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.

ஷாபி ஜமாத் தலைவர் முகமதுஅலி, ஜமாத் தலைவர் முகமதுகனி, கிளை பொருளாளர் மதார்கனிலெப்பை, துணை செயலாளர் முகமதுகான், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ராஜாஜி, கிளை பொருளாளர் காஜாமைதீன், ஒன்றிய பேச்சாளர் ஈசாக் அலி, த.மு.மு.க., கிளை தலைவர்கள் வீராசமுத்திரம் நாகூர்கனி, சம்பன்குளம் அப்துல்ரகுமான், முதலியார்பட்டி பாசூல்அஷ்ரப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் நம்பிராஜன், பழனிக்குமார், கடையம் வட்டார மோட்டார் வாகன சங்க தலைவர் முருகேசன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் செய்யது மசூது, பொருளாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர் கோவை செய்யது பேசினர்.புதிய ஆம்புலன்ஸ்க்கான சாவியை த.மு.மு.க., மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி கிளை தலைவர் முகமதுஅலிஜின்னாவிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி, மாவட்ட துணை செயலாளர் சர்தார்அலிகான், கடையம் ஒன்றிய செயலாளர் காஜாஅலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான்மைதீன், கடையம் ஒன்றிய செயலாளர் மீரான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை செயலாளர் ஆட்டோ சித்திக் நன்றி கூறினார். பொதுமக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு 99445 09050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என த.மு.மு.க.,வினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.