Friday, December 24, 2010

புதுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியன இணைந்து புதுவலசை கிராமத்தில் அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு ம.ம.க மாவட்டச் செயலாளர் எஸ். சலிமுல்லாகான் தலைமையில் 11.12.2010 அன்று நடைபெற்றது. புதுவலசை ஜமாஅத் தலைவர் ஷேக் முகம்மது, செயலாளர் ஜகுபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சந்தீப்குமார், டாக்டர் பூஜா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் சிகிச்சையளித்தனர்.

42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, ஊராட்சி மன்றத் தலைவர் ஆயிசாமரியம், அரபி ஒலியுல்லா பள்ளியின் தாளாளர் லியாகத் அலிகான் மற்றும் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments :