Monday, November 30, 2015

கீழக்கரை தமுமுகவின் டிசம்பர் 6 அழைப்பு


கீழக்கரை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே மதசார்பற்ற தேசத்தின் சகோதர உறவுகளே எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் மானம் உலக அரங்கில் அசிங்கப்பட்ட நாள் ஆம் 300 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மசூதி காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள் ஒவ்வரு வருடமும் டிசம்பர் 6ல் மீண்டும் அதே இடத்தில் அல்லாஹ்வின் பள்ளி கட்டப்படும்வரை எதிர்கால நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பதற்காக தமுமுக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும் 2015 டிசம்பர் 6 அன்று ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு கீழக்கரை நகரில் வாழும் அணைத்து இஸ்லாமிய சொந்தங்களும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது கீழக்கரை நகர் தமுமுக அன்று காலை 9.30 மணி அளவில் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடையில் இருந்து வாகனங்கள் புறப்படும்

இப்படிக்கு 
கீழக்கரை தமுமுக நகர் செயலாளர்
முஹமது சிராஜுதீன் 

Friday, November 20, 2015

டிசம்பர் -6 தமுமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் மாவட்டங்கள்



கீழக்கரை தமுமுகவிண் இரங்கல் அறிக்கை

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை டைரக்டர் டாக்டர் செய்யது அப்துல் காதர் அவர்கள் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம் இருப்பினும் பிறக்கும் அணைத்து உயிர்களும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது இறைகட்டளை 2013ம் ஆண்டு கீழக்கரை தமுமுக சார்பாக சாலைபாதுகாப்பு வாரம் நடத்தினோம் அதில் ஒரு குறும்படம் எடுத்தோம் அப்படத்தில் டாக்டர் அவர்கள் இயற்கையாக மிகவும் இயல்பாக நடித்துகொடுத்தார்கள் அது இன்றுகூட எங்களுக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது டாக்டர் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வால் அல்லாஹ்விடம் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கீழக்கரை நகர் நிர்வாகிகளும் மனிதநேய மக்கள் கட்சியின் கீழக்கரை நிர்வாகிகளும் துவா செய்வதுடன் டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக என்று கூறி எங்கள் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.
 அன்புடன்

 எஸ்.முஹமது சிராஜுதீன் 
 தமுமுக நகர் செயலாளர்
 கீழக்கரை