Sunday, October 19, 2014

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமுமுக தமிழகம் முழுவதும் பெரும் நிதி திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூபாய் 2,20,000 இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக மூத்த தலைவருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் Jawahirullah MH அவர்களிடம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா Thondi Sathik Batcha வழங்கினார். மாநில அமைப்புச்செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் உள்ளிட்ட தமுமுகவினர் உடன் இருந்தனர்.

Friday, October 17, 2014

S.P பட்டிணத்தில் சுட்டுக்கொன்ற சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம்




S.P.பட்டிணத்தில் இறந்த சையத் முஹம்மதுவின் ஜனாஸாவை கூட்டமைப்பின் சார்பாக தமுமுக மூத்த தலைவர் கண்யமிகு பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ்.MLA அவர்கள் பெற்றுக்கொண்டு SP பட்டினம் வந்த பின்னர் சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA பங்கேற்பு

Thursday, October 9, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்




கீழக்கரை நகர் தமுமுக சார்பில் காஷ்மீர் மக்களின் துயர் துடைக்க  நிவாரன நிதி திரட்டும் பணி நடத்து கொண்டு இருக்கிறது. கீழக்கரை வாசிகளா உங்கள் நிதிஐ காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்.

தொடருபுகு கீழக்கரை நகர் தலைவர் முஹம்மது சிராஜுதீன் 

Monday, October 6, 2014

ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பிறகு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.