Friday, September 14, 2012

சென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர் கல்வீசி தாக்குதல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று அளித்த பேட்டியில்:-

இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வாழும் யூதரான சாம்பாஸைல்
 என்பவர் தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரின் உள்ளங்களையும் புண்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றில் ஒப்பற்ற முறையில் சீரிய மாற்றங்களை கொண்டு வந்த 100 நபர்களில் முதன்மையானவர் நபிகள் நாயகம் என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் மைக்கல் ஹார்ட் நீண்ட ஆய்விற்கு பிறகு அறிவித்தார்.

ஆனால் இந்த படத்தை தயாரித்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை கண்டித்தும் இந்த படத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று மாலை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 4.45 மணி அளவில் த.மு.மு.க.வினர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சிலர் தூதரகம் மீது கற்கள் வீசியதாக தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா படமும், அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டன.

இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Thursday, September 13, 2012

சீண்டும் அமெரிக்க கண்டித்தும் சென்னையில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல் அவர்களை இழிவுபடுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்க சினிமாவை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்க சினிமாவை கண்டித்தும் சென்னையில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... 

நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு
இடம் அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரம் விளக்கு மஸ்ஜித் அருகில்

நியாயவான்களை அணிதிரள்வோம்...
முஸ்லிம்களே கொந்தளித்து எழுவோம்...
அமெரிக்க அறக்கர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்....

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சென்னை மாவட்டம்

Monday, September 10, 2012


கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு. மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம்
போலீஸ் அராஜகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

மமக தலைமையகம் அறிவிப்பு

Tuesday, September 4, 2012

கீழக்கரை மின்சாரப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் அமைச்சரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கீழக்கரை மின்சாரப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் அமைச்சரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் திரு.இரா. விஸ்வாதன் அவர்களை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்,

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது:

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும் புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, September 2, 2012

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.









திணறியது இராமநாதபுரம்..... உடைந்து சிதறியது பொய் வாதங்கள்.......

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.

இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக வின் கோட்டைகளில் ஒன்றாகவும் சக்திவாய்ந்த கழக பணியாளர்களையும் உள்ளடக்கியதாகவும் இருந்துவந்தது. அப்படி தீவிர களப்பணியாளர்களின் ஒருவராய் திகழ்ந்த சகோ.சலீமுல்லாஹ்கான் அவர்கள் தமுமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அவருடன
் சில சகோதரர்கள் உண்மைநிலையை அறியாமல் தாங்களும் சென்றார்கள். இதனை வைத்துக்கொண்டு பொய்யையே மூலதனமாக கொண்டுள்ள ஒரு தக்லீத் கூட்டம் இராமநாதபுரத்தில் தமுமுக ம.ம.க வின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும். தமுமுக ம.ம.க கூடாரம் காலியாகிவிட்டதாகவும் இணையதளங்களில் கூப்பாடு போட்டுவந்தனர்.

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 01-09-2012 சனி மாலை 5.30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் சகோ.சாதிக் பாஷா (தலைவர், மமக இராமநாதபுரம் (கிழக்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர், மமக), பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்), கோவை செய்யது (மாநில செயலாளர், தமுமுக), மைதீன் உலவி (மாநில அமைப்பு செயலாளர், மமக), ஜோசப் நொலஸ்கோ (மாநில அமைப்பு செயலாளர், மமக), மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்பு செயலாளர், மமக), கிதிர் முஹம்மது (மருத்துவ அணி மாநில செயலாளர், தமுமுக) ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்தில் வழக்கத்தை விட மாறாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமுமுகவின் கொள்கை அடலேறுகளும், ம.ம.கவின் மனிதநேய சொந்தங்களும் மற்றும் சமுதாய சொந்தங்களும், மீனவ உறவுகளும் அலைகடலென திரண்டு வருகை தந்தனர். பொதுக்கூட்டமா மாநாடா என்ற சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு மக்கள் வெள்ளம்... இராமநாதபுரம் திணறியது..... அல்ஹம்துலில்லாஹ்......................

பொய் பித்தலாட்டக்காரர்களுக்கு சமுதாய மக்கள் வருகை தந்து சவுக்கடிகொடுத்துவிட்டனர்.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே........ இனி எவர்களின் பருப்பும் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் செல்லாது என நிரூபித்துவிட்டார்கள்........

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

- முத்துப்பேட்டை முகைதீன்