Tuesday, July 24, 2012

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மதுரை-திருப்பதி விரைவு ரயிலினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தர்ராஜ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், இராமேஸ்வரம் நகராட்சி தலைவர் திரு. அ.அர்ச்சுனன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்

தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார்.

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார். 

துபாயில் உள்ள ம.ம.க வினர் சேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக செய்து வருகின்றனர். விரைவில் சேகரின் உடல் சொந்த ஊருக்கு வரும் என்றார். சந்திப்பின்போது மாவட்ட த.மு.மு.க.செயலாளர் அன்வர் பொருளாளர் சித்தீக் ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹீம் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Monday, July 23, 2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை), அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற

Thursday, July 5, 2012

கீழக்கரை - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி



கீழக்கரை குடிசை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட, நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.