Tuesday, July 24, 2012

தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார்.

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார். 

துபாயில் உள்ள ம.ம.க வினர் சேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக செய்து வருகின்றனர். விரைவில் சேகரின் உடல் சொந்த ஊருக்கு வரும் என்றார். சந்திப்பின்போது மாவட்ட த.மு.மு.க.செயலாளர் அன்வர் பொருளாளர் சித்தீக் ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹீம் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments :