Friday, December 19, 2014

மதுபான அகற்ற கோரி மபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறள்ளது

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் 22.12.2014 அன்று போரசிரியர்:M.H.ஜவாஹிருல்லாஹ்MLA அவர்கள் தலைமையில் இரு மதுபான அகற்ற கோரி மபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறள்ளது

தலைமையக அறிவிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே காவல்துறையினரால் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், தேவையின்றி விசாரணை என்ற பெயரால் காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் காவல் நிலைய பதிவேடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் யார் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் அனைவருமே அவ்வப்போது காவல்துறையினரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்பிரச்சனைத் தீர்வு காண சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடவடிக்கைகளை தமுமுக மேற்கொண்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுடைய முழு விவரங்களையும் வரும் 1.1.2015க்குள் தமுமுக தலைமையகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா (9940085358) அவர்களை தொடர்புகொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
- தமுமுக தலைமையகம்

Thursday, December 11, 2014

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிசம்பர் 2014 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த 04-12-2014 அன்று நான எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலுரையும்

எனது கேள்வி::
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரை கீழக்கரை, து£த்துக்குடி போன்ற தென் பகுதிகளிலுள்ள ஊர்களை இணைக்கக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு புதிய இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று இந்த அரசு 2013&ல் அறிவிப்பு செய்திருந்தது. 
அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு எந்தவொரு பணியும் நடை பெறுவதாகத் தெரியவில்லை. இராமநாதபுரம் நகரில், மிக பெரிய போக்குவரத்து நெரிசல் இரயில்வே கதவு மூடும்போது ஏற்படும் ஒரு சூழலை தவிர்ப்பதற்காக இந்த அரசு விரைவில் அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை செய்ய ஆவன செய்யுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இராமநாதபுரத்தில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான எந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை என்று சொன்னார்கள், ஒரு இரயில்வே பணியை துவங்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் காலமாகும். இதனை ஏற்கெனவே 2014&2015 கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

இரயில்வே லைனில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளகின்றபோது தல வரைப்படம் தயாரித்தல் நேர்பாடு செய்தல், இரயில்வே துறைக்கு அனுப்புதல் 3 மாதம் ஆகின்றது. துறையின் நேர்பாடு, வரைப்பாடு பெறுதல் ஆறு மாதம் நில திட்டம், வரைப்படம் தயாரித்தல் 3 மாதம் 15/2,ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் 15/1 ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் மதிப்பீடு தயாரிக்க மூன்று மாதம், மதிப்பீடு ஒப்புதல் வழங்குதல் மூன்று மாதம், பணம் வழங்க ஆணைகள் வழங்குதல், நிலம் கையகப் படுத்துதல் 6 மாதம், பயன்பாட்டு சாதனங்களை மாற்றி அமைத்தல் 3 மாதம், வரைப்படம் முடிவடைந்து அதனை தயாரிக்க 3 மாதம் மதிப்பீடு தயாரித்தல் தொழில்நுட்பம் ஒப்புதல் வழங்குதல் 3 மாதம், ஒப்பந்தபுள்ளி முடிவடைந்து பணி ஒப்படைப்பு மூன்று மாதம், ஆக கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகாலம் இதற்கே செலவிடப்படுகின்றது. மீதி 2 1/2 ஆண்டுகள் பணிகள் செய்ய வேண்டிய இதுபோன்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், பாலம் கட்டும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே, மாண்புமிகு உறுப்பினர் சுட்டிக்காட்டியதன் காரணமாக பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்

Wednesday, December 10, 2014

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மதிமுகவினர் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கத

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
--------------------------------------------------------------------------------------------

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய மதிமுக-வினர் மீது சரமாரியாக தடியடி நடத்தியதுடன் போராட்டத்தை படம் பிடித்த தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளiதை வன்மையாக கண்டிக்கிறேன். 
கருப்புக்கொடி போராட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த தமிழக தொலைக்காட்சி செய்தியாளர்கள், காணொளி பதிவாளர்கள் மற்றும் ஏனைய தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். செய்தியாளரின் கேமரா, மைக் போன்றவற்றையும் உடைத்து எறிந்துள்ளனர். ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவிற்கு திருப்பதியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேச அரசு. இதே நேரத்தில் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினர் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியதுடன் அதனை செய்தியாக்கிக் கொண்டிருந்த தமிழக பத்திரிகையாளர்களையும் மோசமாக ஆந்திர மாநில காவல்துறையினர் தாக்கியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும். பாஜகவின் ராஜபக்சே விசுவாசத்திற்கு தாங்களும் விசுவாசமாக இருக்கின்றோம் என்பதை சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்துவதற்காகவே ஒத்துமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்வகையில் திருப்பதியில் தமிழர்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று கருதுகிறேன். 
கைதுச் செய்யப்பட்ட மதிமுகவினரையும்பத்திரிகையாளர்களையும் உடனடியாக ஆந்திர அரசு விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
தொடர்ந்து தமிழர்களின் நலனுக்கெதிராக செயல்படும் பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது போல் தேமுதிகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் வெளியேற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(ஒ-ம்) எம்.எச். ஜவாஹிருல்லா

Tuesday, December 9, 2014

அரசியல் அரங்கில் ஆச்சரியப்படுத்தும் ஜவாஹிருல்லாஹ் MLA!

சென்னை : அரசியல் அரங்கில் எங்கும் எதிலும் கமிஷன், ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில், ஒரு ரூபாய் கூட லஞ்சம், கமிஷன் பெறாமல் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH. ஜவாஹிருல்லாஹ்,
தனது தொகுதி மக்களுக்காக முழுமையாக ரூ. 36 கோடியே 56 லட்சம் செலவில் இராமநாதபுரம் தொகுதியில் பணிகள் செய்திருப்பது பெரும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் பரிந்துரையின் பேரில்...
கடந்த 2011 முதல் 2014 வரை ரூபாய் சுமார் 17.5 கோடியில் நெடுஞ்சாலைத்துறையின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராம நாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1473 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில், 355 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 340 கிலோ மீட்டர் நீளமுள்ள மாவட்ட சாலைகளும், 778 கிலோ மீட்டர் நீளமுள்ள இதர சாலைகளும் அடங்கும்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து கொடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு பணிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்கும், அதன் பராமரிப்பு பணிகளுக்கும் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை! நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அகலப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்துதல் சாலைகள் மேம்பாடு செய்தல் சாலைகளின் இருபுறமும் உள்ள குறுக்கு வடிகால் சிறு பாலங்களை மராமத்து செய்து திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சிறப்பு பராமரிப்பு மேற்கொள்ளுதல், காலமுறை புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருடாந்திர பராமரிப்பு நிதியின் கீழ் சாலைகளில் நொடிகள் சீர்செய்தல் உள்ளிட்ட பணிகள் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 2011-2015 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் திட்டம் சாரா பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் ஆனந்தன் உதவி கோட்ட பொறியாளர் வேல்ராஜ் ஆகியோர் கூறியதாவது:-
இந்த நிதி ஆண்டில் 17 கிலோமீட்டர் தூர முள்ள சாலைகள் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ளன. இது தவிர பகுதி-2 திட்டத்தின் கீழ் கட்டிட பணிகள் கடந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.47 லட்சத்திலும், 2012- 13ம் நிதியாண்டில் ரூ.22 லட்சத்திலும், 2013-14ம் நிதியாண்டில் ரூ.35 லட்சத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2014 -15ம் இந்த நிதி ஆண்டில் மொத்தம் 3 திட்டங்களிலும் சேர்த்து 80 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் ரூ.36 கோடியே 56 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேற்கண்ட பணிகள் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் M.H. ஜவாஹிருல்லா MLA அவர்களின் பரிந்துரையின் பெயரில்
1 . உத்திரகோசமங்கை மங்கை முதல் திருப்புல்லாணி வரை புதிய சாலை அமைத்தல்
2 . உச்சிப்புளி புதுமடம் சாலை மேம்பாட்டுக்காகவும்
3 . வழுதூர் பெரியபட்டிணம் சாலையை மேம்படுத்துதல்
4 . திருப்புல்லாணி முதல் பிரப்பன்வலசை வரை சாலை மேம்பாடு
5 . பிரப்பன்வலசை முதல் ரெகுநாதபுரம் வரையிலும் சாலை மேம்பாடு
6 . உத்திரகோசமங்கை கிராமசாலை மேம்பாடு
7 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை சாலை மேம்பாடு
8 . மண்டபம் கிராமசாலை மேம்பாடு
9 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை செல்லும் வழியில் காஞ்சிராங்குடி வரையிலும் சாலை மேம்பாடு
10 . இருமேனி மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
11 . வேதாளை மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
12 . பெரியார் நினைவுத்தூண் முதல் கேணிக்கரை வரையிலும் சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
ஆகிய பணிகளும் இது தவிர குறிப்பாக கோப்பேரிமடம் முதல் ஆற்றாங்கரை வரையில் 5 கிலோ மீட்டர் சாலை ரூ.4 கோடியே 20 லட்சத்திலும், உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலை முதல் கடுக்காய்வலசை வரை யிலான 1.7 கிலோ மீட்டர் சாலை ரூ.80 லட்சத்திலும், திருப்புல்லாணி முதல் குத்துக்கல் வலசை வரையிலான 2.4 கிலோ மீட்டர் சாலை ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலும் போடப்பட உள்ளது.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பெயரில் மேற்கண்ட பணிகளுக்காக ரூ.17.5 கோடி நிதி புதிய சாலைகள் அமைக்கவும், சாலைகள் மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சாலைப்பணிகள் தவிர மற்ற பணி நிறைவு பெறாத சாலைப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 2015 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

Wednesday, November 19, 2014

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர்

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !

இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்பிரச்சினையில் கூடுதல் கவனமெடுத்து பேசி வந்தார்கள்.

அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.

Saturday, November 15, 2014

தொழுகை செயல்முறை பயிற்சி



தொழுகை செயல்முறை பயிற்சி 
========================================

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 14:11:2014 வெள்ளியன்று இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் தொழுகை செயல்முறைகள் தொடர்பாக வகுப்பெடுத்தார்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் தொழுகையில் சகோதரர்கள் அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை விளக்கி பேசினார்கள்,

இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட சகோதர்களுக்கு பயனுள்ள அமர்வாக இருந்து,இதன் தொடர்ச்சியை இறைவன் நாடினால் 21:11:2014 வெள்ளியன்று இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் நாசர் அலிகான் அவர்கள் நடத்த உள்ளார்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Saturday, November 8, 2014

காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு


காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது தெரிந்ததே. 

இந்நிதியை ஜம்மு&காஷ்மீர் மாநில முதல்வரிடம் ஒப்படைப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜம்மு&காஷ்மீர் மாநில தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் முன்னுக்கு வந்துவிட்டதால் மாநில முதல்வரிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஸ்ரீநகர் ஆட்சியரும் துணை ஆணையருமாகிய பாரூக் அஹமதுஷாவிடம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதியாக தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர். 

காசோலை ஒப்படைக்கப்பட்ட பின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

Sunday, October 19, 2014

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமுமுக தமிழகம் முழுவதும் பெரும் நிதி திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூபாய் 2,20,000 இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக மூத்த தலைவருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் Jawahirullah MH அவர்களிடம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா Thondi Sathik Batcha வழங்கினார். மாநில அமைப்புச்செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் உள்ளிட்ட தமுமுகவினர் உடன் இருந்தனர்.

Friday, October 17, 2014

S.P பட்டிணத்தில் சுட்டுக்கொன்ற சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம்




S.P.பட்டிணத்தில் இறந்த சையத் முஹம்மதுவின் ஜனாஸாவை கூட்டமைப்பின் சார்பாக தமுமுக மூத்த தலைவர் கண்யமிகு பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ்.MLA அவர்கள் பெற்றுக்கொண்டு SP பட்டினம் வந்த பின்னர் சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA பங்கேற்பு

Thursday, October 9, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்




கீழக்கரை நகர் தமுமுக சார்பில் காஷ்மீர் மக்களின் துயர் துடைக்க  நிவாரன நிதி திரட்டும் பணி நடத்து கொண்டு இருக்கிறது. கீழக்கரை வாசிகளா உங்கள் நிதிஐ காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்.

தொடருபுகு கீழக்கரை நகர் தலைவர் முஹம்மது சிராஜுதீன் 

Monday, October 6, 2014

ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பிறகு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Monday, September 29, 2014

தமிழக முதல்-அமைச்சர்கள்

தமிழக  முதல்-அமைச்சர்கள்

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு:

ராஜாஜி        10-04-1952 முதல் 13-04-1954 வரை

கே.காமராஜ்        13-04-1954 முதல் 02-10-1963 வரை

எம்.பக்தவச்சலம்        02-10-1963 முதல் 06-03-1967 வரை

அண்ணா        06-03-1967 முதல் 03-02-1969 வரை

மு.கருணாநிதி         10-02-1969 முதல் 04-01-1971 வரை
                              15-03-1971 முதல் 31-01-1976 வரை

எம்.ஜி.ஆர்        30-06-1977 முதல் 17-02-1980 வரை
                              09-06-1980 முதல் 15-11-1984 வரை
                              10-02-1985 முதல் 24-12-1987 வரை

ஜானகி ராமச்சந்திரன்        07-01-1988 முதல் 30-11-988 வரை

மு.கருணாநிதி        27-01-1989 முதல் 30-01-1991 வரை

ஜெ.ஜெயலலிதா        24-06-1991 முதல் 12-05-1996 வரை

மு.கருணாநிதி        13-05-1996 முதல் 13-05-2001 வரை

ஜெ.ஜெயலலிதா        14-05-2001 முதல் 21-09-2001 வரை

ஓ.பன்னீர்செல்வம்        21-09-2001 முதல் 01-03-2002 வரை

ஜெ.ஜெயலலிதா        02-03-2002 முதல் 12-05-2006 வரை

மு.கருணாநிதி        13-05-2006 முதல் 15-05-2011 வரை

ஜெ.ஜெயலலிதா        16-05-2011 முதல் 27-09-2014 வரை 



Thanks dailythanthi

Saturday, September 27, 2014

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ Moulavi JS Rifayee வெளியிடும் அறிக்கை:

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீண்ட காலம் நடந்த வழக்கு என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 

சமீபகாலமாக பல்வேறு பதவி ஆசை வார்த்தைகளுக்கு நீதிபதிகளும் பலி ஆகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறது; நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும்; அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு பாடமாக அமையும். 

இந்த தீர்ப்பினால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு தரப்பும், தோற்று விட்டோம் என்று இன்னொரு தரப்பும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பை அலசக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தவகையில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாடமாக அமைந்துவிட்ட தீர்ப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தீர்ப்பைப் பார்க்கிறது.

இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர்

Saturday, September 20, 2014

அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியைக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி


தொண்டியில் இன்று செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர் இதற்கு பெரிதும் காரனமாக அமைந்த ஆசிரியர் ஆசிரியைக்கும் பள்ளிக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விருதுகளை அரசு மேல் நிலைப்பள்ளி தொண்டிக்கு வருவதற்கு இடத்தை தானமாக வழங்கிய கல்வி தந்தை கான்சாகிபு செய்யது முகம்மது அவர்களின் பேரன் செய்யது முகம்மது அவர்கள் விருதுகளை வழங்கினார் உடன் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் இஞ்சினியர் அபுபக்கர் மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆசிக் அஹமது உள்ளிட்டோர் இருந்தனர்

Decan chronicle ஆங்கில பத்திரிகையில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் அளித்த பேட்டி

த மு மு க தலைவர் ரிபாய் வெளிப்படுத்தியதாவது , 

யார் இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்களின் கருத்தை மாற்றுவதற்கு மோடியின் பேட்டி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் .

எனினும், மோடியும் , அவரது கட்சியை சார்ந்தவர்களும் முஸ்லிம்கள் குறித்து கூறிய கடந்த கால அறிக்கைகள், குஜராத் கலவரங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு என்று கூறினார்.

தேசபற்றை நிரூபிக்க பிரதமரின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் ஏற்கனவே நாட்டிற்காக போராடியும், உயிரை தியாகம் செய்தும் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Tmmk president rifayee expressed hope that modi's statement would change the opinion of those who raise doubts about the patriotism of indian muslims.

however, he said that if modi and his party thought that muslims would forgot their past statements and the gujarat riots, they were wrong.we don't need prime minister's certificate to prove our patriotism .

We always fought sacrificed our lives for the country, he noted-

http://www.deccanchronicle.com/140920/nation-current-affairs/article/muslims-laud-pm-narendra-modi’s-remark

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்!

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்! பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள். 1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் மக்களை தேடி வருகிறது. மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்...!! வங்கி கணக்கு விபரம்: A/C No:034811011900313 TMMK TRUST, Andhra Bank, Chennai Main Branch, Rajaji Salai, Chennai-1 தலைமையகம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை &1 போன்: 044&25247824

Tuesday, September 16, 2014

காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. முதலாவதாக சென்னை தலைமையகத்திற்கு ‘ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களிடம் ரூ.10,000/&க்கான காசோலையை வழங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உடன் இருந்தார்.

Sunday, September 14, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்: ஒரு முக்கிய வேண்டுகோள்

தத்தளிக்கும் காஷ்மீர்:
ஒரு முக்கிய வேண்டுகோள்
உலகில் உன்னதமான சுற்றுலாத்தலமான, இயற்கை எழில் நிறைந்த காஷ்மீர், சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் அழிவின் அடையாளமாக காட்சியளிக்கிறது.
மழை நின்று ஒருவாரம் ஆகியும் வெள்ளத்தின் காரணமாக ஸ்ரீநகரின் வீதிகள் அனைத்துமே மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டாலும், லட்சக்கணக்கான மக்கள் அதிலே மாட்டிக்கொண்டு இன்னமும் பரிதவித்து வருகின்றனர்.
வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களாக, உடுப்பதற்கும், உண்ணுவதற்கும் இல்லாதவர்களாக காஷ்மீர் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அடுத்த வேளை உணவிற்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் பல கிராமங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளம் வடிந்து இயல்பான நிலைக்கு அவர்கள் திரும்பவே நீண்ட காலம் ஆகலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு மோசமான வெள்ளப் பேரழிவு இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளும், இந்திய ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும், உதவியும் செய்து வருகின்றன. எனினும் அங்கிருந்து வரக்கூடிய செய்திகளும், அங்குள்ளவர்களுடன் நாம் தொடர்பு கொண்டபோது கிடைத்த செய்திகளும் நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகின்றன. அதிர்ச்சியடைய செய்கின்றன.
இந்தியாவின் எந்தப் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த துயரத்தில் பங்குபெற்று உதவிகளை செய்துவரக்கூடிய தமுமுக, ஏற்கனவே குஜராத் நிலநடுக்கத்தின் போதும், ஒரிஸ்ஸா வெள்ள பாதிப்பின்போதும் கோடிக்கணக்கில் நிதியுதவியும், பொருளுதவியும் செய்திருக்கிறது.
அதேபோல் காஷ்மீர் துயரத்திலும் தன்னை இணைத்துக் கொள்கிறது. தன்னுடைய லட்சக்கணக்கான தொண்டர்களையும் அந்த துயரத்தில் பங்கெடுக்கச் செய்யும் விதமாக அம்மாநில மக்களுக்காக தாராள பொருளாதாரத்தைத் திரட்டி, அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உ.பி. மாநிலம் முசப்பர் நகர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருளுதவிகளை கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதிக்கட்டமாக வரும் 19.09.2014 அன்று நமது கழகத்தின் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களும், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் முசப்பர் நகர் செல்ல இருக்கிறார்கள்; இன்ஷாஅல்லாஹ்.
அதேபோன்று காஷ்மீர் மக்களுக்காகவும் நம்மால் இயன்ற அளவிற்கு குறைந்தது 2 கோடி ரூபாயாவது திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் தலைமையில் மாநிலச் செயலாளர்கள் கோவை செய்யது, பி.எஸ்.ஹமீது ஆகிய மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே துண்டுப்பிரசுரங்கள், பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் காஷ்மீர் துயரத்தை எடுத்துச்சொல்லி நிதி திரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு ஜும்ஆவிலும், எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்காக்களிலும் நிதி திரட்டி காலதாமதமின்றி வரும் 10.10.2014க்குள் தலைமையிடம் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் செய்யும் தாராள பொருளுதவி பாதிக்கப்பட்ட காஷ்மீர மக்களின் கண்ணீரைத் துடைப்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத்தரும் என்பதையும் மறவாதீர்.
- தமுமுக தலைமையகம்

Wednesday, September 3, 2014

கீழக்கரை நகர தமுமுக சார்பில் பொதுக்கூட்டம்








இராமநாதபுரம் கிழக்கு கீழக்கரை தமுமுக சார்பில் 1/9/2014 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் வரலாற்று உணமைகளை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாவட்ட தலைவர் சகோதரர் தொண்டி சாதிக்,மாவட்ட செயலாளர் தேவிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் சகோதரர் ஜாகீர் ஹுசைன்,பொருளாலர் சகோதரர் வானி சித்திக் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்

Wednesday, August 27, 2014

கீழக்கரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 15,00000 ( பதினைந்து லட்சம் ) செலவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிட வேலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்தபோது.

கீழக்கரை தமுமுக நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

கீழக்கரை  தமுமுக நடத்தும்  31.08.2014 மாலை 6:30 மஃரிப் தொழுகைக்குப்பிறகு கீழக்கரை நகர் நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.
தலைமை : M.சாதிக் பாட்சா மாவட்ட தலைவர்.
வரவேற்புரை : S.முஹம்மது சிராஜுதீன் நகர் தலைவர்.
சிறப்புரை : சகோ.கோவை செய்யது அவர்கள் மாநில செயலாளர் தமுமுக.
சகோ.ஜாஹிர் ஹுசைன் மாவட்ட செயலாளர் மமக (தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் )
நன்றியுரை : சகோ.அன்பின் ஹசன் அவர்கள் (மூத்த தலைவர் கீழக்கரை நகர் தமுமுக)
பாலஸ்தீனத்தில் நடக்கும் அநீதியை அறிந்திட அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது தமுமுக , கீழக்கரை நகர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.

Saturday, July 26, 2014

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

Wednesday, July 23, 2014

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். . . த மு மு க கடும் கண்டனம்

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். 
. . த மு மு க கடும் கண்டனம் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை 

டெல்லியில் உள்ள மகராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராக பணியாற்றும் அர்ஷத் என்ற சிறுபான்மை சகோதரர் மீது சிவசேனா எம்பிக்கள் வெறித்தனமாக, நாகரிக வரம்பு மீறி நடந்து கொண்டதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகளும், பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாத காட்டுமிராண்டி தனமானதாகும் இது வன்மையாக கண்டிக்க தக்கது, 
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் இது விவாதமாக மாறி இருக்கிறது.
ரமலான் நோன்பு வைத்து இருக்கும் உணவு வழங்கல் மேற்பார்வையாளர் அர்ஷத் க்கு சிவசேனா எம்பிக்கள் கட்டாயப்படுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்துள்ளதாக வெளியான தகவல் நாடுமுழுவதும் வாழும் அமைதி விரும்பும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து குடிமக்களுக்கும் முன்மாதிரியாக திகழவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விதம் வரம்பு மீறி நடந்து கொள்வது நாகாரீக உலகில் இந்திய திருநாட்டின் பெருமையை குலைத்து விடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சம்பந்த பட்ட எம்பி வரம்பு மீறிய செயல் வீடியோ ஆதாரங்களாக வெளி வந்து இருக்கும் நிலையில் மத்திய அரசும் , நாடாளுமன்ற சபாநாயகரும் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றம் இழைத்த சிவசேனா எம்பிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

ஜே எஸ் ரிபாயி 

தலைவர் தமுமுக

Monday, July 21, 2014

குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த இராமநாதபுரம் தமுமுக



இன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் சாலைத்தெரு அருகில் ரோமன் சர்ச் பின்புறம் பிறந்து 3 நாளே ஆன பெண் குழந்தை யாரோ விட்டு சென்றனர் இதை பார்த்த பொதுமக்கள் தமுமுக விற்கு தகவல் கொடுத்தனர் உடனே சம்பவ இடத்திர்க்கு சென்ற தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மாவட்ட மருத்துவ சேவை அனி செயலாளர் யாசர் அரபாத் ஒன்றிய தலைவர் பாக்கர் அலி அவர்கள் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனை மூலமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர் 

Sunday, July 20, 2014

திருப்புலானி ஒன்றியம் மேலப்புதுக்குடி தமுமுக கிளை சார்பில் இன்று நடைபெற்ற இப்தார்




இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருப்புலானி ஒன்றியம் மேலப்புதுக்குடி தமுமுக கிளை சார்பில் இன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா,டாக்டர்,M.H.ஜவாஹிருல்லாஹ்(தமுமுக மூத்த தலைவர்)அவர்களும் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள் இப்தார் நிகழ்ச்சியினை திருப்புலானி ஒன்றிய தமுமுக தலைவர் சகோ,ரைஸ் தலைமையில் மேலப்புதுக்குடி கிளை நிர்வாகிகள் சிரப்பாக செய்து இருந்தனர்