Tuesday, August 28, 2012

Monday, August 20, 2012

மருதாணி வைப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பரவி வரும் செய்தி திட்டமிட்ட வதந்தியாகும்.... யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்...

-தமுமுக தலைமையகம்

Saturday, August 18, 2012

கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது


கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது இந்த ஃபித்ராபொ ருட்கள் அவர்கள்  வீடு தேடி சென்று ,ஃபித்ரா பொருட்கள் கொடுக்கப்பட்டது  கீழக்கரை நகர் தலைவர் செஎது இப்ராகிம் அவர்களுடன் கீழக்கரை நகர் தமுமுக மமக  நிர்வாகள் உடன்  இருத்தனர் ,ஃபித்ரா பொருட்கள் வழக்ப்படும்போது

கீழக்கரை 500 பிளாட் புதிய தமுமுக கீழை திறக்கப்பட்டது



கீழக்கரை தமுமுக புதிய கீழை திறக்கப்பட்டது கீழக்கரை 500  பிளாட் எனும் இடத்தில புதிய தமுமுக கீழை திறக்கப்பட்டது இந்த கீழைய தமுமுக   தமுமுக முத்த தலைவர்  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.) திறந்துவைத்து கொடியதினர். இப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது  இந்த  நிகழ்ச்சியில்  நகர்  மற்றும்  மாவட் செயலாளர் அன்வர் அலி ,  மாவட் தலைவர் சதிக்கு பாஷா தமுமுக ஒன்றியச் தலைவர் ரைஸ்  கீழக்கரை நகர் தலைவர் செஎது இபுராஹிம் .பொருளாளர் ஈஸி சதிக்கு செயலர் ராஜா ஹுசைன் இக்பால் கிளை நிர்வாகள் அனைத்து சமுதாய  பொது மக்கள் கலந்து 

Friday, August 10, 2012

தமுமுக மமக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil.,PhD.,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது

தமுமுக மமக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil.,PhD.,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது. 

நேர்மையான தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கி பாராட்டு விழா

நாள்: 11 ஆகஸ்ட் 2012 (சனிக்கிழமை), மாலை 5 மணி

இடம்: எதிராஜ் மகளிர் கல்லூரி கேளரங்கம், சென்னை

நிகழ்ச்சி ஏற்பாடு: ஊழலை எதிர்த்த ஒருங்கிணைப்பு, சென்னை

Tuesday, August 7, 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை

அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.


அழைக்கிறது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Saturday, August 4, 2012

கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்


கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது தொகுதியான இராமநாதபுரத்திற்குட்பட்ட, கீழக்கரையை கடந்த 2010 ஆம் ஆண்டு தனித் தாலுகாவாக அமைக்க வருவாய்துறையின் மூலம் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டதின் அடிப்படையில் தாலுக்கா அலுவலகத்திற்காக கீழக்கரை சதக் டிரஸ்ட் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தனர் மேலும் கடந்த 21.05.2011ல் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரால் தற்காலிக அலுவலத்திற்கு இடம் தேர்வு செய்ய சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் புள்ளிவிவரப் பணி காரணமாக புதிய தாலுக்கா பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்தும் புதிய அலுவலகம் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நானும் இதுகுறித்து சட்டபேரவையில் கேள்வி எழுப்பினேன் அதற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் இவ்விசயம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனவே நிலுவையில் உள்ள கீழக்கரை தனித் தாலுக்கா விரைவில் உதயமாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Wednesday, August 1, 2012

துபாயில் உயிரிழந்த கீழக்கரை மீனவரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலைமைசெயலாலரை நேரில் சந்தித்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடந்த 23/07/2012 அன்று துபாயில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த மீனவர் சேகர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 கோடி நிவாரண தொகையை அமெரிக்காவிடமிருந்து பெற்று வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (01/08/2012) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு திபேந்திரநாத் சாரங்கி அவர்களை நேரில் சந்தித்து மறைந்த மீனவர் சேகரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டி கோரிக்கை வைத்தார்.