கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(அக். 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்
Monday, October 29, 2012
Friday, October 26, 2012
ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்து
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த எனது கழகத்து சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் கீழக்கரை தமுமுகவின் ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Thursday, October 25, 2012
Wednesday, October 10, 2012
‘கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்’ என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
‘கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்’ என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் வர்த்தக நகரங்களுள் ஒன்றான கீழக்கரை மற்றும் அருகாமை பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
ஆக. 18ல், ஏழாவது வார்டுக்குட்பட்ட பெரிய அம்பலார் தெருவில் இன்ஜினியரிங் மாணவர் பாத்திஹ் மவுலானா(19) உயிரிழந்தார். அதற்கு 10 நாட்கள் முன்னதாக, 16வது வார்டுக்குட்பட்ட புது தெருவில் அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாதக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
செப். 30ல் 15வது வார்டுக்குட்பட்ட மாதிஹூர் ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அங்கு வந்திருந்த ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிகாரிகள் மெத்தனம் காரணமாகவே, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மூன்று மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீழக்கரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு வார்டில் டெங்கு பாதிப்பின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே, அந்தப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
கீழக்கரை நகராட்சியில் தற்போது மலேரியாவும் பரவுகிறது. சரியான முறையில் கொசுவுக்கு புகை மருந்து அடிப்பதில்லை. கிணறுகளிலும் மருந்து தெளிப்பதில்லை. முறையான கண்காணிப்பு இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் பேசி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். இவ்வாறு தெரிவித்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் வர்த்தக நகரங்களுள் ஒன்றான கீழக்கரை மற்றும் அருகாமை பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
ஆக. 18ல், ஏழாவது வார்டுக்குட்பட்ட பெரிய அம்பலார் தெருவில் இன்ஜினியரிங் மாணவர் பாத்திஹ் மவுலானா(19) உயிரிழந்தார். அதற்கு 10 நாட்கள் முன்னதாக, 16வது வார்டுக்குட்பட்ட புது தெருவில் அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாதக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
செப். 30ல் 15வது வார்டுக்குட்பட்ட மாதிஹூர் ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அங்கு வந்திருந்த ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிகாரிகள் மெத்தனம் காரணமாகவே, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மூன்று மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீழக்கரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு வார்டில் டெங்கு பாதிப்பின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே, அந்தப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
கீழக்கரை நகராட்சியில் தற்போது மலேரியாவும் பரவுகிறது. சரியான முறையில் கொசுவுக்கு புகை மருந்து அடிப்பதில்லை. கிணறுகளிலும் மருந்து தெளிப்பதில்லை. முறையான கண்காணிப்பு இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் பேசி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். இவ்வாறு தெரிவித்தார்
Monday, October 8, 2012
இராமநாதபுரம் - திருச்சி புதிய பேருந்து வசதி: எம்.எல்.ஏ. தலைமையில் தொடக்கம்
இராமநாதபுரத்தி-ருந்து திருச்சிக்கு புதிய பேருந்து போக்குவரத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். சுந்தரராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்து ஆர்.எஸ். மங்கலம், சி.கே. மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இப்பேருந்து சேவை இராமநாதபுரத்திலிருந்து தினமும் காலை 6:45, 10:20 மற்றும் 6:15, திருச்சியிலிருந்து அதிகாலை 5:25, மதியம் 12:30 மற்றும் மாலை 4 மணி என 3 முறை இயக்கப்படும்
Saturday, October 6, 2012
Subscribe to:
Posts
(
Atom
)