Monday, December 27, 2010

பெரியபட்டினம் படகு விபத்து 6ஆம்புலென்சுகளுடன் தமுமுக நிவாரணப் பணி


ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் டிசம்பர் 26 அன்று நடந்த படகு விபத்தில் 16பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி எங்கள் வேதனையை அதிகப்படுத்துகிறது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.



விபத்துப் பற்றிய செய்தி அறிந்து உடனே 6ஆம்புலென்சுகளுடன் அங்குச் சென்று நிவாரணப் பணிகளை இராமநாதபுரம் (கிழக்கு) தமுமுக செய்துள்ளது.

அப்பகுதி பவளப்பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், கடலோர காவல் படையின் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.

இச்சூழலில், அனுமதியின்றி அருகில் உள்ள அப்பா தீவுக்கு சுற்றுலா செல்ல மக்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்விக்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த பலர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்,போதிய முதலுதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு விபத்து பற்றிய செய்தி உடனடியாக தெரிவி்க்கபட்டப் போதினும் அரசின் மருத்துவ மற்றும் மீட்புக் குழு தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ குழு அங்கு வந்து முதலுதவி செய்திருந்தால் பல உயிர்களை காப்பற்றியிருக்கலாம்.

தமிழக அரசு இந்த விபத்தில் உயிர் இழந்த 15பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு ரூ1 இலட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
.

No comments :