Tuesday, November 16, 2010

சென்னை , மேலப்பாளையம், கோவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பெருநாள் திடல் தொழுகை!!!

சமுதாய சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தாவா பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் தியாகத் திருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் பிராட்வேயில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் உள்ள திடலில் நடைப்பெறுகிறது, , பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, சென்னையில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


மேலப்பாளையத்தில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 7 :30 , மணியளவில் பஜார் திடலில் தொழுகை நடைப்பெறுகிறது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி J .S .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்திகிரார்கள்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, மேலப்பாளையத்தில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கோவை செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது கோவை சையது அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது
கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள JK கர்டன் திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது சகோதரர் ரெக்ஸ் ரபி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் தியாகத் திருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக நடைப்பெறுகிறது.

No comments :