Wednesday, November 17, 2010

மேலப்பாளையத்தில் பெருநாள் திடல் தொழுகை.




இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக பெருநாள் தொழுகை இன்று 17 -11 -2010 ,காலை நடைப்பெற்றது,மௌலவி அப்துல் காதர் மிஷ்பாஹி அவர்கள் தொழுகை நடத்தினார்கள்,
தொழுகைக்குப் பின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி j .s .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், தனது உரையில் ஹஜ் பெருநாளின் சிறப்புகளை குறித்தும் இப்ராஹிம்(அலை)அவர்களின் தியாகம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்,நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மேலப்பாளைய நகர நிர்வாகிகள் முஸ்லிம் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்,தொழுகைக்கான ஏற்பாடுகளை நகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள், தொழுகைக்குப் பின் மேலப்பாளைய நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே .
நெல்லை மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக கடையநல்லூர்,புளியங்குடி ஆகிய பகுதிகளிலும் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்.மாவட்டத்தில்

1 comment :

கீழை அஹமது said...

kilakarayil thozhuhai photo update seyyavum