Sunday, November 21, 2010

திருப்பூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கூட்டம்

திருப்பூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாக கூட்டம், மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அன்சார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு கோம்பைத்தோட்டம், சொர்ணபுரி லே-அவுட் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில், சாக்கடை கால்வாய், சாலை பணிகள் துவங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். "அனைத்துக்கட்சி கூட்டங்களில் சிறுபான்மையினரை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நெருங்க உள்ள நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை தலைவராக பஷீர், துணை செயலாளராக சாதிக், மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளராக மீரான் நியமிக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் இக்பால் நன்றி கூறினார்.

Source: Dinamalar

No comments :