தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று (20 நவம்பர்) காயல்பட்டணத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார்
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1 செந்தூர் எக்ஸ்பிரசை சென்னைக்கு தினசரி கார்டு லைனில் இயக்க வேண்டும்
2 நிதி ஒதுக்கீடு செய்யப்பட இரண்டாம் பைப் லைன் திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
3 இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காயல்பட்டண நகராட்சிக்கு போதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படவேண்டும்
4 புதிய பேருந்து நிலையம் அருகில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்கள் கட்ட இடங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்பும் வாடகை கட்டிடங்களில் இயங்கிவருவது வேதனைக்குறியது. உடனடியாக இங்கு கட்டிடங்கள் கட்டப்படவேண்டும்.
இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
No comments :
Post a Comment