Thursday, August 26, 2010

தமுமுக துபை மண்டலம் லெப்பைகுடிகாடு தமுமுக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச


ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் லெப்பைகுடிகாடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. அப்துல் காதர் அவர்கள் தலைமைத் தாங்கினர்.
21-08-2010 அன்று சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.இறுதியில் பொது மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது

No comments :