Saturday, August 28, 2010

அப்துல் நாசர் மதானி கைது: காரைக்காலில் த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் கைதைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் யுசுப்கான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

No comments :