அல்லாஹ்வின் உதவியால் 19 - 08 - 2010 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு துபாய் சோனாப்பூர் பலுதியா கேம்பில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் மௌலவி. சிவகாசி முஸ்தபா அவர்கள் ''ரமலானில் நாம் கடைபிடிக்க வேண்டியவை'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உரையின் முடிவில் தமிழகத்தில் சமுதாய மக்களுக்காக தமுமுக செய்துவரும் பணிகளை எடுத்துரைத்தார்கள். அதேபோல முஸ்லிம்கள் ஏன் அரசியல் ரீதியான எழுச்சி பெறவேண்டும் என்பதைபற்றியும் எடுத்துரைத்தார்கள். இறுதியில் மார்க்க, மற்றும் அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.
இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள். பலுதியா கேம்ப் சகோதரர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள். பலுதியா கேம்ப் சகோதரர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
No comments :
Post a Comment