Friday, August 27, 2010

பாலஸ்தீனில் நோன்பு நோற்கும் கிறிஸ்தவர்கள்


பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை பகுதியில் பைத்துல் லஹ்மு என்று அழைக்கப்படும் பெத்லஹேம் (ஈஸா நபி பிறந்த) நகரில் புனித ரமலான் நோன்பைமுஸ்லிம்களுடன் சேர்ந்து கிறிஸ்துவர்களும் கடைப்பிடிக்கும் வித்தியாசமான தகவல் கிடைத்திருக்கிறது. பாரம்பரியமாக முஸ்லிம் களுடன் வாழ்ந்து வரும் பாலஸ்தீன கிறிஸ்தவர்களும்ரமலான் முழுவதும் நோன்பு இருந்து தங்களின்நல்லிணக்கத்தை காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது போன்று நோன்பு இருப் பதினால் தங்களின் சமய நம்பிக் கையில்எவ்வித பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் முஸ்லி ம்கள் இடையே தொன்று தொட்டு நிலவி வரும் நெருங்கிய உறவை இது காட்டுவதாக சமூக வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments :