Saturday, November 7, 2009

கீழக்கரையில் ஜன்னல் வழியே குச்சியை நுழைத்து வீட்டில் துணிகர கொள்ளை :

ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரை மேல தெருவை சேர்ந்தவர் உமர் அப்துல்காதர், அவரது மனைவி அய்னுல் மர்லிகா. இவர் நேற்று இரவு தூங்க செல்லும் முன்பு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடினை கழட்டி ஜன்னல் ஓரம் வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட “மர்ம” நபர்கள் நைசாக ஒரு குச்சியை வீட்டுக்குள் நுழைத்தனர். பின்னர் அந்த வைரதோடை நகட்டி அதனை எடுத்து சென்று விட்டனர்.
இன்று காலை எழுந்து பார்த்த அய்னுல் மர்லிகா வைரதோடு காணாமல் போனது கண்டு பதறி போனார். இது குறித்து கீழக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் சங்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக் கரை பகுதியில் தற்போது தொடர் கொள்ளை நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

No comments :