Saturday, November 14, 2009

பரமக்குடி மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் இடம்

பரமக்குடியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்ற மாணவர் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்பட்ட செய்தியை மக்கள் உரிமையில் (06 26) வெளியிட்டிருந்தோம். இது குறித்து ராமநாதபுரம் ஐக்கிய செயலாளர் ஆலம் தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீனை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரினார். அவர் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வின் கவனத்தற்கு எடுத்துச் சென்றார்.
தமுமுக தலைவர் உடனடியாக மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட சீட்டை வழங்கவும் கோரினார். இதனையடுத்து 11.11.2009 அன்று மூகாம்பிகை மருத்துவக் கல்லூரிலேயே அம்மாணவருக்கு இடமளிக்க கல்லூரி சார்பில்த நீதிமன்றத்தல் உறுதி அளிக்கப்பட்டது. அடுத்த நாளே மாணவர் கல்லூயில் சேர்க்கப்பட்டார்.

த.மு.மு.கவின் இம்முயற்சிக்கு மாணவர் ஷேக் அலாவுதீன் குடும்பத்தினரும் இராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் செயலாளர் ஆலமும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments :