Thursday, July 15, 2010

உருது மொழியை நசுக்கும் கட்டாய மொழிக் கொள்கையைக் கண்டித்து வாணியம்பாடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


உருது மொழியை பாகம்-1 (Part-1) ஆகக் கற்பதற்கு இரு ந்த வாய்ப்பைத் தமிழக அரசு பறித்திருப்பதைக் கண்டித்து 10.7.2010 அன்று வாணியம்பாடி யில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.


மாவட்டத் தலைவர் ஏ.அஸ்லம் பாஷா, தலைமை வகிக்க மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தலைமைக்கழக அலு வலகச் செயலாளர் ஜெ.வசீம் அக்ரம் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத் தார். உருது, மற்றும் தமிழில் கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜகனி ம.ம.க அமை ப்புச் செயலாளர் நாசர் உமரி, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வாணியம்பாடி பகுதிப் பிர முகர்களும், ஜமாஅத் தலைவர் களும், ஆசிரியர்களும், மாணவர் களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்றது இதுதான் முதல் முறை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ராஷ்ட்ரிய சகாரா, உள்ளிட்ட தேசிய ஊடகங்களின் செய்தியா ளர்கள் த.மு.மு.க&வின் நிலைபாட்டை கேட்டறிந்தனர்.

நகர அமைப்புக் குழுத்தலைவர் டி.ஆர்.ஷவ்கத், உஸ்மான், எஸ். ரபீக், ஏ.எம்.பாஷா, பீ.ரஜாக், ஆம்பூர் நசீர், ஆகியோர் போராட்ட ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

www.tmmk.info

No comments :