Wednesday, July 21, 2010

மீனவர்களை கொல்லாதே! வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம்

இந்திய இலங்கை கடற்பகுதியில் சமீபத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஜூலை 16 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மமக து.பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மமக மாவட்டச் செயலாளர் முபாரக், ஒன்றியச் செயலாளர் நஸ்ருல் இஸ்லாம், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லாஹ், சாகுல், பரக்கத்அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

No comments :