Wednesday, July 14, 2010

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலளார் எஸ். ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகளாக இருந்த எம்.ஏ. சீனி அஹ்மது, ஜே.கே.இப்னு மற்றும் ஏ.நூர் முஹம்மது ஆகியோர் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வாங்கிக் கொண்டதுடன் மதுரையில் உள்ள சில சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கும் அவர்கள் பதில் தரவில்லை. கழகத்தின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் வகையில் செயல்பட்ட இந்த மூவரும் த.மு.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள். மதுரையில் 09-07-10 மாலை நடைபெற்ற மதுரை மாவட்ட தமுமுகவின் செயல்வீரர் கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்குக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வீடியோ காட்சிகளை போட்டு காட்டினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட தற்கால நிர்வாக அமைப்பு கே. முஹம்மது கவுஸ் அவர்கள் தலைமையில் இயங்கும். தற்கால நிர்வாக அமைப்பின் உறுப்பினர்களாக கஜினி முஹம்மது, அப்பாஸ், அஜ்மீர் அலி மற்றும் காதர் முகைதீன் ஆகியோர் செயல்படுவார்கள்.

No comments :