Saturday, July 3, 2010

ஜீலை 5 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் ஜீலை 5 அன்று நடத்தும் முழு அடைப்பிற்கு முழுமையான ஆதரவை அளிப்பதென இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்துள்ள எரிபொருட்களின் விலை ஏற்றம் ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக வஞ்சிக்கும் கொடும் நடவடிக்கை ஆகும். ஓரிரு இந்திய பெருமுதலாளிகளுக்கும், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாக இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு அவசியமான ஒன்று என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

இந்த முழு அடைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

No comments :