Wednesday, July 14, 2010

இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி







திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------

மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டு இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி போட்டி


திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற 1வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் செய்யது முகம்மது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் செயல் அலுவலர் செல்வமணியிடம் செய்யது முகம்மது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

No comments :