Saturday, March 6, 2010

தமுமுக துபை மண்டலம்] ஷார்ஜா-வில் முமுக மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி‏

முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டல மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி04.03.2010 அன்று ஷார்ஜா ரொடானா ஹோட்டலுக்கு எதிர்புறமுள்ள நத்தானி மெடிக்கல் சென்டர் பில்டிங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முமுக-வின் அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தலைமை வகித்தார்.தன் தலைமையரையில் இஸ்லாமிய சொற்பொழிவுகள், திருக்குர்ஆன்;,கல்வி மற்றம் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள், ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சித் திட்டங்கள் ஆகியவை முமுக மர்கஸில் நடைபெறும் என்று கூறினார்.அடுத்ததாக அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றிய இஸ்லாமியஅழைப்பாளர் நாஸர் அலிகான் அவர்கள், நம் ஒவ்வொருவர் மீதும் அழைப்புப் பணி என்பது கடமை எனவும், நபிமார்கள் எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் மார்க்கத்தை மக்களிடையே எடுத்துவைத்தார்கள் எனவும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட முமுக-வின் அமீரக துணைத் தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் ஷார்ஜா மண்டல நிர்வாகிகளின் முயற்சியை பாராட்டியதோடு யார் ஒரு நல்ல விஷயத்தை தொடக்கி வைக்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு என்று கூறினார்.இதுநாள் வரை ஷார்ஜா IAC-ல் வியாழன் தோறும் இரவு 09.30-10.30 வரை நடைபெற்று வந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடமாற்றத்தின் காரணமாக முமுக மர்கஸில் இனி நடைபெறும் என மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் அவர்கள் கூறினார். பெண்களுக்கென தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் பெண்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.இறுதியாக துபாயில் மிகப் பெரிய அளவில் மார்ச் 18 முதல் நடைபெறவிருக்கின்ற இஸ்லாமிய கண்காட்சிக்கு அனைவரும் சென்று பயனடைய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஒரு சில வேலைவாய்ப்பு செய்திகள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடைந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

No comments :