Wednesday, March 17, 2010

அபுதாபியில் நேர மேலாண்மை பயிற்சி


அபுதாபி: அபுதாபியில் உள்ள கேரளா சோசியல் சென்டரில் நேர மேலாண்மை பயிற்சி முகாம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.

நெல்லை ஏர்வாடி நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமை சாதிக் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி துவக்கி வைத்தார்.

துபாய் மண்டல பொறுப்பாளர் உவைஸ் பயிற்சியாளரைப் பற்றி அறிமுக உரையாற்றி, இது போன்ற நிகழ்ச்சிகளின் அவசியம் குறித்து விளக்கினார்.

மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹுசைன் பாஷா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு நேரமேலாண்மை குறித்து பயிற்சியளித்தார்.

ஒலி ஒளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சி முகாமில் மிக எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும்படியான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இறுதியாக நன்றி கூறிய அபுதாபி பகுதியின் பொறுப்பாளர் அப்துல்லாஹ், இது போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.

சிற்றுண்டி, தேநீருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டை ஈமான் (EMAN) நண்பர்கள் செய்திருந்தனர்.

No comments :