Tuesday, June 8, 2010

வழக்கறிஞராக வேண்டுமா?

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா?உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும் வழங்கப் படும்.

2010 வருடத்திற்கான அரசு சட்ட கல்லூரியில் ஐந்து ஆண்டு B.A.B.L., படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பனிரெண்டாம் வகுப்பு (+2 )முடித்த ,21 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள சட்ட கல்லூரிகளில்
(சென்னை,திருச்சி,நெல்லை,மதுரை,செங்கல்பட்டு,கோவை,சேலம்,மற்றும் புதுச்சேரி)விண்ணப்பத்தை பெற்று உடனடியாக விண்ணபிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் விவரங்களுக்கு தமுமுக மானவரணியை தொடர்பு கொள்ளவும்.

காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன். M.A.,B.L
(மாநில மாணவரணி செயலாளர் தமுமுக)
செல் - 99942 92932

No comments :