Wednesday, June 30, 2010

கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்


ராமநாதபுரம், ஜூன் 26: கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 4 பேரை காவல் துறையினர் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். கீழக்கரை போலீஸôர் முள்ளுவாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ் வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, மினி லாரியின் டிரைவரான ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (32) மற்றும் லாரியில் இருந்த கூலித் தொழிலாளர்களான மணிவண்ணன், மாரிமுத்து, முனியசாமி ஆகிய 4 பேரையும் விசாரித்து, அவர்களை விருதுநகர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக வருவாய்த் துறையினரும் கீழக்கரையில் எந்த ரேஷன் கடையிலிருந்து அரிசி கடத்தப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

dinamani news

No comments :