Tuesday, June 8, 2010

முதலிடம் பெற்ற மாணவிக்கு லேப்டாப் கணிணி பரிசு

10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற ஜாஸ்மீன் தமுமுக தலைமையகத்திற்கு தனது பெற்றோர்களுடன் வருகை புரிந்தார்
தமிழகத்தில் முதலிடம் பெற்றதற்கு தமுமுக தலைவர் பாராட்டு தெரிவித்தார்.அப்போது 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றது போல் மட்டுமின்றி, 12 ஆம் வகுப்பிலும் முதலிடம் பெற வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ் தேர்விலும் முதலிடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது உடன் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தமுமுக சார்பில் மாணவி ஜாஸ்மீனுக்கு லேப்டாப் கணிணி வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. தான் 10ம் வகுப்பு வரை படித்த அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புகளை படிக்கப் போவதாகவும் ஜாஸ்மின் தமுமுக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

news by: www.tmmk.info


No comments :