Saturday, September 19, 2009

CBI யின் வசம் ஒப்படைக்கப்படும் ஷோபியான் வழக்கு - நீதி கிடைக்குமா???


ஷோபியானில், ராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்கள் நிலொஃபர்(22), ஆசியா(17) அவர்களின் வழக்கு CBI யின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கை முன்னதாக விசாரித்து வந்த காஷ்மீர் போலீஸார் இந்த வழக்கு சார்ந்த விசாரணைகளில் பெரும் குழப்பங்களையும் மோசடிகளையும் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பவே இந்த விசாரணையை CBI யின் வசம் ஒப்படைக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்தது.

CBI யின் இயக்குனர் அஷ்வாணி குமார் இதுபற்றி கூறுகையில், "CBI இந்த வழக்கை எடுப்பதற்கான தன்னுடைய நிலை பற்றி அரசிடம் தெளிவு படுத்திவிட்டது. மேலும் இந்த வழக்கு CBI யிடம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றிய முடிவை நாங்கள் அரசிடம் விட்டுவிட்டோம்" என்று கூறினார்.

ஜம்மு பெராமல்லிருந்ததை அரசு, தான் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் பெறாமலிருந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 9 ல் மத்திய அரசை தொடர்பு கொண்டு இந்த வழக்கை விசாரிக்க CBI க்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டது.

மேலும் ஜம்மு அரசு உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை CBI யின் வசம் ஒப்படைக்க போவதாகவும், இதனால் அரசுக்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை என்றும், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை அது தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் கூறியுள்ளது.

No comments :