Tuesday, August 18, 2009

தொண்டியில் தமுமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

தொண்டியில் ஆக.15இல் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மாவட்ட அரசு மருத்துவமனையும் இணைந்து தொண்டி சிந்தா மஹாலில் மாபெரும் இத்ததான முகாம், தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

ம.ம.க. மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் செய்யதலி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் 63 நபர்கள் இரத்ததானம் செய்தனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் அவசர தேவைக்கு இரத்ததானம் கொடுக்க முன்வந்தனர்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர், துணைச் செயலாளர் அன்வர் அலி, மாவட்ட மாணவரணி செயலாளர் கலந்தர் ஆசிக், ஒன்றிய துணைச் செயலாளர் சம்சுதீன் முனவர், ஒன்றிய தலைவர் நிஹ்மத்துல்லா, ஒன்றிய மமக செயலாளர் பரக்கத் அலி, ஒன்றிய இணை செயலாளர் சேக் முஹம்மது, நகர் நிர்வாகிகள் சுல்த்தான், அப்துல் ரஷீது, அப்துல் ரஜாக், அப்துல் ரஹ்மான், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அப்துல் அஜீஸ், அழகப்பா கல்லூரி டாக்டர். ரவிக்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.ம.க. மாவட்ட செயலாளர் சலீமுல்லாஹ் கான், தொண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பால்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் வெ.வீ.துரைச்சாமி, டாக்டர் ஸ்டீபன் சகாயராஜ், ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அயூப்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அகமது பயாஸ் நன்றி கூறினார்.

No comments :