Tuesday, August 25, 2009

அரபி கல்லூரி கட்டுமான பணிக்கு ரூ. ஒரு லட்சம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மனித நேயமக்கள் கட்சி சார்பில் வேதாளை தெற்குதெரு ஜமாத் சார்பில் கட்டபட உள்ள அரபி கல்லூரி கட்டுமான பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. முத்துபட்டிணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சர்புதீன் மகன் அசாருதீன்(13) சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 20 ஆயிரம் , சென்னை வில்லிவாக்கம் பாரதிநகரை சேர்ந்த அன்சாரிக்கு மருத்துவ நிதியாக 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் நிதியை வழங்கினார்.

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அன்வர் அலி, த.மு.மு.க., தலைவர் ஷேக்ஜமாலுதீன், செயலாளர் அல்லாபிச்சை, துணை செயலாளர் ரசுல் கான், மாவட்ட தொண்டரணி செயலாளர் அஜ்மல் கான், மண்டபம் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன்கபீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments :