Tuesday, August 18, 2009

முதுகுளத்தூரில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.மு.மு.க. பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் த.மு.மு.க., மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், "அண்ணா பிறந்த நாளில் ஆயிரத்து 405 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கோவை குண்டுவெடிப்பில் 12 ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக உள்ளவர்களை அடுத்த அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்தது ஜனநாயக குற்றமாகும். மின்னணு ஓட்டுபதிவில் ஏற்படும் குறைகளை களைய போதுமான விளக்க கூட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும் என த.மு.மு.க., வலியுறுத்தியுள்ளது" என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சல்மான், செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் அமிருல் ஹக், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், மாவட்ட துணை செயலாளர் அஜிஸ் கனி, த.மு.மு.க., நகர செயலாளர் ரைசூல் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments :