Tuesday, February 11, 2014

சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி விழா

சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி விழா

கீழக்கரை மக்தூமிய கல்விக்குழுமம் மற்றும் பழைய குத்பா பள்ளி நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மக்தூமிய உயர் நிலைப்பள்ளியில் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். பள்ளி தாளாளர் AKS அமீர் சுல்தான் அவர்கள் முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA- வை கௌரவபடுத்தினர். எங்கள் வேண்டுகேளை ஏற்று புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியத்திற்கு எங்கள் பகுதி மக்கள் சார்பாக நன்றி என தெரிவித்தார்.
பழைய குத்பா பள்ளி தலைவரும் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவருமான ஹாஜா முகைதீன் அவர்கள் கூருகையில் புதிய கட்டிடம் சம்பந்தமாக முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA வை சந்திக்க வேண்டும் என்று கீழக்கரை தமுமுக தலைவர் தம்பி சிராஜுதீனிடம் சென்னவுடன் இது நமது பகுதி ஏழை மீனவர்கள் வீட்டு பிள்ளைகள் அதிகம் உள்ள பள்ளி அரசு உத்தரவு படி நிதி ஓதுக்கீடு சம்பந்தமாக என்ன செய்ய முடியுமே அதை முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA விடம் தகவல் தந்த முயற்சிப்போம் என்று கூரினார். அதன் பிறகு MLA கீழக்கரை வருகையின் போது நமது பள்ளிக்கு அழைத்து முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இன்று இந்த புதிய கட்டிடம் கட்ட 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மிக மகிழ்ச்சியளிக்கிறது. அதேடு நின்று விடாமல் உடனே டெண்டர் விடப்பட்டது. இந்த துரித நடவடிக்கைக்கு முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கும் மற்றும் துணைணின்ற தமுமுக கீழக்கரை நிர்வாகத்திற்கும் அவர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் நன்றி நன்றி என தெரிவித்தார்

No comments :