Tuesday, February 18, 2014

தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது




தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது,

இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி 15 நாட்களில் சுமார் 1 கோடியை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் நிவாரண நிதியை உரியவகையில் வினியோகம் செய்வதற்காக தமுமுக குழு முஸப்பர் நகருக்கு புறப்பட்டிருக்கிறது மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, அமைப்புச் செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு புறப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு முஸப்பர் நகரில் முகாமிட்டு அகதி முகாம்களில் வாடிவதங்கும் மக்களை இக்குழு சந்திக்கவுள்ளது. அம்மக்களின் மறுவாழ்வு குறித்து அம்மாநில அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அறிவு ஜீவிகள், சமூக சேவகர்கள் என பல தரப்பினரையும் இக்குழு சந்திக்க உள்ளது.

இவண்
தமுமுக தலைமையகம்

No comments :