Friday, January 17, 2014

லோக்சபா தேர்தல்.. கட்சிகளின் செல்வாக்கும் 40 தொகுதிகளின் கள நிலவரமும்: நக்கீரன் சர்வே

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகளும் வரிசைகட்டி வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் சம பலத்துடன் மோதுவதாக நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் 6 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளையும் கடந்த 6 மாத கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையில் "நக்கீரனின் மெகா சர்வே" விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


மனித நேய மக்கள் கட்சி.. மனித நேய மக்கள் கட்சிக்கு மத்திய சென்னை, நாகப் பட்டினம், வேலூர், திருச்சி, நாமக்கல், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பெரும் புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், விருதுநகர், வடசென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாம்..

No comments :