Sunday, January 26, 2014

சொன்னதை செய்த ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவுக்கு கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் நன்றி!


கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்  நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மஹ்தூமியா பள்ளியில் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு  நீண்ட கால காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு  வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவிடம் இக்கோரிக்கை வைக்கப்பட்டு அவர் பள்ளியை பார்வையிட்டு இதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்தார் .அதோடு  உடனடியாக ரூ15 லட்சத்தை கட்டுமான பணிக்கு இப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தருவதாக அறிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிந்து தற்போது உடனடியாக இதற்கான நிதி   ஒதுக்கப்பட்டு முறையாக   இப்பணிக்கு கீழக்கரை நகராட்சி மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா முஹைதீன் கூறியதாவது,
சொன்னாதோடு நிற்காமல் உடனடியாக செயல்பட்டு மஹ்தூமியா பள்ளி கட்டுமான பணிக்கு ரூ 15 லட்சம் நிதி ஒதுக்கிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவுக்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்

news by- keelakaraitimes.com

No comments :