Monday, January 10, 2011

மேலப்பாளையத்தில் அடக்கஸ்தலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகரம் சந்தை முக்கு,ஹாமீம்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் அமைக்க இடம் ஒதுக்கக்கோரியும், அப்பகுதியில் போக்குவரத்தை குறைக்க ரவுண்டானா அமைக்கக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 02.01.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஹாஜா, செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் நேசம் ரப்பானி, மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் காசிம் பிர்தௌஸி, பொருளாளர் சர்தார் அலிக்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இந்தக் ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments :