Thursday, January 6, 2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்கோபர் கிளை நிர்வாகிகள் கூட்டம்

சமுதாய ஒற்றுமை மற்றும் மமகவின் தேர்தல் வெற்றிக்காக மக்கா புனித பயணம்

06.01.2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்கோபர் கிளை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 2-1-2011 அன்று பொறியாளர் சகோ.ஷஃபி அஹமது வீட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக அல்கோபர் கிளை சார்பாக வரும் 19-1-2011 அன்று புனித மக்கா பயணம் (உம்ரா) ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் உம்ராவில் நம் சமுதாய ஒற்றுமைக்காகவும் வரும் தேர்தலில் மமக வெற்றிக்காகவும் துவாச் செய்ய பயணாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

அல்-கோபர் கிளை மக்கள் உரிமையில் மிகவும் கவனம் செலுத்தி வருவதையும் மேலும் மக்கள் உரிமையை விற்பனையை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்-கோபர் கிளை உறுப்பினர்களை அதிகரிக்க அதற்கான குழு அமைக்கத் திட்டமிடட்ப்பட்டது. இக்கூட்டத்தில் கிளைத்தலைவர் சகோ.இஸ்மாயில் செயலாளர் சகோ.ஹாஜாபஷிர் பொருளார் சகோ.ஷஃபி அஹமது மக்கள் தொடர்பாளர் சகோ. நவாப் ஜான் மற்றும் இதர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments :