Tuesday, January 26, 2010

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்....



திருப்பூர்- ஜனவரி-26

போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப் (வயது 42) . தமுமுக மாவட்ட தலைவர். இவர் மீது பொய் புகார் கூறி திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரனை இல்லாமல் இவரை ஏ டி எஸ் பி முருகசாமி. மற்றும் பெண் எஸ் ஜ மல்லிகா. இவரை கண்முடிதானமாக தாக்கிறார்கள். இவர் அப்போது நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறிகிறார் அதற்கு நீ எவன இருந்த எனக்கு என்ன என்று முருகசாமி கூறிகிறார். பிறகு இவரை நிர்வான படுத்தி தாக்க முயற்ச்சிகிறார் அனால் இவர் கதறிகிறார். இவரை மிண்டும் மிண்டும் தாக்கிறார்கள். அப்போது யூசுப் நான் இப்போது தான் தலையில் ஆப்ரோஷன் செய்து உள்ளோன். நான் என்ன தவறு செய்தோன் சொல்லுங்கள். கேட்டுகிறர் ஆனாலும் இவரை விட்டு விடவில்லை. பிறகு மாவட்ட தமுமுக. மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தயுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலைமறியலும் ஈடுபட்டனர். போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி. அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினார்.
தமுமுக மாநில செயலாளர் உமர், கோவை மாவட்ட மனித நேய மககள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட தமுமுக தலைவர் பஷிர், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹாலிதீன், ஆகியோருடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பிறகு யுசுப் அவர்களை கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments :