Friday, January 8, 2010

மனித நேய மக்கள் கட்சி சார்பாக திமுக கவுன்சிலர்யை கண்டித்து ஆர்பாட்டம் கோவையில்


கோவை புறநகர் பகுதியான குறிச்சி, நகராட்சி துனைத்தலைவரும், 1-வது வார்டு ஆத்துபாலம் பகுதி கவுன்சிலருமான இ.எம். அனிபாவை கண்டித்து 1-வது வார்டு பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியும் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது, 1-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் காலனியில் பாட்ட ஏற்பாடு செய்ய கோரி பலமுறை கூறியும் அதில் அசட்டையாக இருந்து. ஆத்துபாலம் பகுதியில் சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யாமை சாக்கடை சுத்தம் செய்யாதால் கடந்த 25-11-05 அன்று அசாருதீன் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சால் இறந்தது கூறியும் அசட்டையாக இருந்தது. 1-வது வார்டில் குப்ழபத்தொட்டி வைக்காமல் அதை 2-வது வார்டில் உள்ள மண்டபங்கள் முன்பு வைத்தது. டி.எ.ஹச்.காலனியில் பொது சுகாதாரக் கழிப்பிடம் 3 வருடமாகக் கேட்டும் ஏற்பாடு செய்யாதது, தெரு விளக்குகள் முறையாக அமைக்காமல் இருப்பது. குடிநீர் விநியோகம் சரிவர முறைப்படுத்தால் வார்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் 1-வது வார்டு, 2-வது வார்டு பகுதிகளில் ராஜ வாய்க்கால் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீரென காலி செய்ய வேண்டும் என அச்சுறுத்துவதை நகராட்சி கண்டு கொள்வதில்லை.
மேலும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகபபடுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் நகர மக்களுக்கு வழங்க வேண்டும். என தழிழக அரசுயின் கவணத்திற்காக இந்த ஆர்பாட்டம் நடத்தபாட்டது.
இந்த ஆர்பாட்டதிற்க்கு அந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் மற்றும் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துனை செயலாளர் ஷாஜகான். தமுமுக மாவட்ட செயலாளர் ரபிக். இளைஞர் மாவட்ட செயலளாளர் அப்பாஸ். மற்றும் ஜபார். பாபு. அஜிஸ். ஹக்கிம். 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்
செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா



No comments :