Wednesday, April 8, 2009

தி.மு.க-அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி?

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான மனிதநேய மக்கள் கட்சியை தங்களது கூட்டணியில் சேர்க்க தி.மு.க.. மற்றும் அ..தி.மு.க. நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பேச்சு நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மனிதநேய மக்கள் கடசி அ.தி.மு.க. கூட்டணியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே மனிதநேய மக்கள் கட்சியை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க. தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்களது அணிக்கு வாருங்கள். கவுரவமான முறையில் தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம் என்று கூறி மனிதநேய மக்கள் கட்சியுடன் தி.மு.க. அணியினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்கள்.


அதே நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

No comments :