Saturday, April 4, 2009

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு முடிவு

பத்திரிகை அறிக்கை


தேர்தல் கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு முடிவு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் இன்று (04.04.09) சென்னையில் நடைபெற்றது, தமுமுக தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி. பொருளாளர் ஒ. யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர்
ஜே. எஸ. ரிபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை உமர், ஏ. எஸ். எம். ஜூனைத் மவ்லா நாசர் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, பொருளாளர் ஹாருன் ரசீத் துணைப் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் எம். ஜெய்னுல் ஆபீதீன். முஹம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 200 செயற்குழு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் பங்குக் கொண்டார்கள்.


சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இச்செயற்குழுவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதித்தது, பின்னர் வரும் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாக குழுவிற்கு அளிப்பது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

No comments :