Wednesday, October 20, 2010

தொண்டியில் தமுமுக பொதுக் குழு கூட்டம்

திருவாடானை தாலுகா தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) தொண்டி கிளையின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் மாநிலச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனித நேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் அகம்மது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொண்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், குறிப்பாக பெண் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு போக்குவரத்து பணிமனையை உடனடியாக துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொண்டி நகர் செயலர் முகம்மது ஆசீக், அப்துல் ரசீக், அலாவுதீன் ரசாக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments :