Wednesday, October 6, 2010

குமரி மாவட்டம் மிடாலத்தில் விநாயகர் ஊர்வலக் கலவரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.
சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.இச்செய்தி மக்கள் உரிமையில் வெளியானதின் எதிரொலியாக தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மிடாலம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட 8 வீடுகள், 3 கடைகளுடன் கூடிய வீடுகள், 21 கடைகள், மற்றும் 5 வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 15 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட விநாயகர் ஊர்வலத்தினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிடாலம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments :