Monday, October 11, 2010

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை! த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

முன்னாள் அமைச்சரான திரு. வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே சமூக விரோதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அவரை கொடூரமான முறையில் கொன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருமாறு காவல்துறையையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இது தமிழக அரசுக்கு நல்லதல்ல.
திரு. வெங்கடாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments :