Thursday, May 6, 2010

கரூர் அருகே இன்று விபத்து: தாறுமாறாக ஓடிய லாரி கார் மீது மோதியது; 6 பேர் பலி ஊட்டியை சேர்ந்தவர்கள்


ஊட்டியை சேர்ந்த அப்துல்கனி, யூனிக், மாத்தியூ, பாட்ஷா, அபிபுல்லா, ஏசயன் ஆகியோர் ஒரு காரில் திருச்சி வந்தனர். மே.5- காலை 11 மணி அளவில் அவர்கள் திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் நோக்கி காரில் சென்றனர். அப்போது பாளையத்தில் இருந்து அரியலூருக்கு ஜல்லி ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

சிந்தாமணிபட்டி போலீஸ் சரகம் வீரணம்பட்டி அருகே உள்ள சரக்கம்பட்டி என்ற இடத்தில் லாரி சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் காரில் இருந்த அப்துல்கனி, யூனிக், மாத்தியூ, பாட்ஷா, அபிபுல்லா, ஏசயன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும் சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

No comments :