Monday, May 17, 2010

+2 சாதனையாளர்கள்

பன்னிரன்டாம் வகுப்பில் சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் விபரங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பன்னிரன்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் நினைவுப் பரிசு வழங்கும் காட்சி.பிளஸ்-2 தேர்வில் கண் தெரியாத மாணவி ஜரின் பானு சாதனை வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார்.கண்பார்வை இல்லாத மாணவி வணிகவியல் பாடத்தில்200க்கு200 மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளார்.கரூர் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஜரின் பானு இவர் பிறவியிலேயே இரண்டு கண் பார்வை இல்லாதவர். ஆனால் பார்ப்பவர்களுக்கு கண்ணில் எந்த குறையும் தெரியாது.இந்த மாணவி பிற மாணவிகள் படிக்கும் பள்ளியி லேயே படித்து வந்தார். இவர் 1,074 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளார்.பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-தமிழ் 169, ஆங்கிலம் 146, வரலாறு 185, பொருளாதாரம் 178,வணிகவியல் 200,கணக்குபதிவியல் 196 மொத்தம் 1074.''நான் கண்பார்வை இல்லாமல் கஷ்டப்பட்டு படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு படிப்புக்கு என் பெற்றோரும், ஆசிரியரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.இனி பட்ட படிப்பு ஆங்கிலம் எடுத்து படிக்க உள்ளேன். பின்னர் ஆசிரியர் பணி ஆற்றுவதே என் விருப்பம் ஆகும். என் சகோதரர்அபுதாகிர் என்னை போல கண் பார்வை இல்லாதவர். அவர் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார்.எனது மேல் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.மாணவி ஏ.ஜரின்பானுவை பள்ளி தாளாளர் சி.பிரடெரிக், தலைமை ஆசிரியர் மேரி சந்திரா, வணிகவியல் துறை ஆசிரியை சலோமி டெய்சி ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பால் முதலிடம்: எதிர்காலத்தில், தகவல் தொழில் நுட்ப பொறியாளராக ஆசை முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் பேட்டிஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பால் மாவட்டத்தில் முதலிடத்தை பிடிக்க முடிந்ததாகவும், எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணி யாற்ற ஆசைப்படுவதாக நீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் கூறினார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. தேர்வை 71/2 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். நேற்று காலை 9 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.நீலகிரி மாவட்ட அளவில் கூடலூர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிஷாரோஸ் மாவட்டத்தில் முதலிடத் தையும், அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவி நெஸ்ரீயா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.மாவட்டத்தில் 1-3-வதாக வந்த கூடலூர் மாணவிகள்மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்த கூடலூர் செயின்ட் தாமஸ்மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நிஷாரோஸ் 1200-க்கு 1,166 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியில் படித்து வந்த மாணவி இ.நெஸ்ரீயா, 1151 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் மதிப்பெண்கள் பெற்ற விவரம்:-தமிழ் -189, ஆங்கிலம்-190, இயற்பியல்-193, வேதியியல்-200, கம்ப்ïட்டர் அறிவியல்-196, கணக்கு-198, மொத்தம் 1166.ஆசிரியர்கள் வாழ்த்துநீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ்சின் தந்தை முகமதலி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தாய் சவுதா, அண்ணன் நபி, தம்பி நிகால் ஆகியோர் உள்ளனர். மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததால் மாணவி நிஷாரோசை, பள்ளி முதல்வர் ராஜன் வர்க்கிஷ், ஆசிரியர்கள் வெங்கடாசலம், சுரேஷ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் மாணவி நிஷாரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது-தகவல் தொழில்நுட்ப பொறியாளராக ஆசைநான், மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் முதலிடம் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் டி.வி. பார்ப்பதில்லை. ஏனெனில் நேரமும் இல்லை. பள்ளிக்கூடம், டிïசன் என நேரங்கள் கழிந்தது. அதிக மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பதற்கு எனது பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் தான் காரணம்.இல்லாவிட்டால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க முடியாது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக படிக்கலாம் என எண்ணி உள்ளேன். பொறியாளராக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.இவ்வாறு மாணவி நிஷா ரோஸ் பேட்டியின் போது கூறினார். அப்போது கூடலூர் செயின்ட் தாமஸ் பள்ளி முதல்வர் ராஜன் வர்க்கிஷ் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.'இருதய நோய் டாக்டராவதே லட்சியம்' திருச்சி முதலிடம் பெற்ற மாணவி பேட்டிதிருச்சி: திருச்சி மாவட்ட அளவில் ப்ளஸ் 2 தேர்வில், சமயபுரம் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி மாணவி ஷமீமா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். ஷமீமா பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 192, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 199, வேதியியல்- 200, உயிரியல்- 200, கணிதம்- 200. மொத்தம் 1182 மதிப்பெண். ஷமீமாவின் தந்தை முகமது பாரூக், அரபு நாடு சார்ஜாவில் தலைமை அக்கவுண்டட்டாக பணிபுரிகிறார். தாய் லைலா ஜான். சகோதரி ஷாய்மா. இரட்டைக்குழந்தைகளான இருவரும் எஸ்.ஆர்.வி., பள்ளியில் படித்தனர். ஷாய்மா 1169 மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது சார்ஜாவில் இருக்கும் ஷமீமா, மொபைல்ஃபோன் மூலம் அளித்த பேட்டி: எங்களது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. நான் 8வது படிக்கும்போதே, மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். அதற்காக, கடந்த இரு ஆண்டாக குடும்பத்தை பிரித்து ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.தினமும் 10 மணி நேரம் வரை படிப்பேன். பள்ளியில் வாரத்திற்கு 5 முறை டெஸ்ட் வைப்பார்கள். டெஸ்ட்டில் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதை திருத்துவார்கள். அவர்கள் வைத்த டெஸ்ட் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்,ஸி.,க்கு பிறகு 'டிவி' பார்ப்பது இல்லை. எனக்கு கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. எனது வெற்றிக்கு பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள்தான் காரணம்.இருதய நோய்க்கான டாக்டர் ஆவதே எனது லட்சியம். உயிரை காக்கும் சிக்கலான மருத்துவம் என்பதால் அது எனக்கு பிடிக்கும். மருத்துவ படிப்பை தமிழகத்திலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் படிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். மதுரை மாவட்டத்தில் முதல் மாணவிபிளஸ் 2 தேர்வில் தமிழைத் தவிர பிறமொழியை முதல் பாடமாக எடுத்து மாவட்டத்தில் முதல் இடங்களை பெற்ற மாணவி:- பெமினா செரின் ஷாஜகான்(1179) மகாத்மா மாண்டிசேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் வருமாறு:- சமஸ்கிருதம்-197, ஆங்கிலம்-188, பொருளியல்-197, வணிகவியல்-199, அக்கவுண்டன்சி-200, வணிககணிதம்-198. பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 1148 மதிப்பெண் பெற்று ஆரிபா சம்சாத் முதலிடத்தை பிடித்துள்ளார். பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் ஆயிரவைசிய மேல் நிலைப்பள்ளி மாணவி ஆரிபா சம்சாத் 1148 மதிப் பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது தந்தை கமல் அப்துல் நாசர். இவர் கீழக்கரை ஹைராத்துல் ஜலா லியா பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். மாணவியின் தாய் ஷாஜாத்தி பேகம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார். மாணவி ஆரிபா சம்சாத் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ் - 186 ஆங்கிலம் - 186 இயற்பியல் - 197 வேதியியல் - 192 உயிரியல் - 189 கணிதம் - 198 மொத்தம் - 1148 மாணவி ஆரிபா சம்சாத் கூறியதாவது:- தினத்தந்தி வினா-விடை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் தான் என்னை முதல் மதிப்பெண் பெற செய்தது. என்ஜினீயரிங் படிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறினார். முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை சபை தலைவர் ராசி.என்.போஸ், தாளாளர் லெனின்குமார், தலைமை ஆசிரியர் வீரராஜ், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சந்தியாகு, பூபாலன் உள்பட பலர் வாழ்த்தினர். தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலாவது மற்றும் முன்றாவது இடம் பெற்ற மாணவிகள்தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் மாண்டிசோரி பள்ளி மாணவி ரஜபு பாத்திமா. இவர் நெல்லை மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி சபுனா சுலைமான் 1200-க்கு 1173 மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடம் பெற்று உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-192, ஆங்கிலம்-190, இயற்பியல்-199, வேதியியல்-196, கணிதம்-197, உயிரியியல்-199. சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 2-வது இடம் பிடித்த முசுலிம் மாணவிவள்ளிïர் ஆசிர்நகர் கெயின்ஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஜாகின் பாத்திமா 1200-க்கு 1155 மதிப்பெண்கள் எடுத்து 2-வது இடம் பெற்று உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-189, ஆங்கிலம்-185, இயற்பியல்-196, வேதியியல்-189, கணிதம்-197, கம்ப்ïட்டர் சயின்ஸ்-199. சேலம் மாவட்ட அளவில் 2-வது இடத்தில் அல்மாஸ்அல்மாஸ் - தேவியாகுறிச்சி பாரதியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி. இவர் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- தமிழ் - 195; ஆங்கிலம் - 186; இயற்பியல் - 198, வேதியியல் - 199, கம்ப்ïட்டர் சயின்ஸ் - 198; கணிதம் - 200.இவர் சேலம் மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பிடித்த ஜாகிராபேகம்விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாகிராபேகம் 1133 மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்ங்குர் என்பது குறிப்பிட தக்கது விலங்கியல் பாடத்தில் மாநிலத்தில் 3-வது இடம் சர்வத்நவீன் விலங்கியல் பாடத்தில் மாநில அளவில் 3-வது இடத்தை ஆம்பூர் மாணவி சர்வத்நவீன் பிடித்து சாதனை படைத்தார். அவர் டாக்டருக்கு படித்து ஏழைமக்களுக்கு சேவை செய்வதே குறிக்கோள் என தெரிவித்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள ஹஸ்னத்-யே-ஜாரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சர்வத்நவீன் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-வது இடத்தை பிடித்து உள்ளார். அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- உருது - 186, ஆங்கிலம் - 182, இயற்பியல் - 184, வேதியியல் - 193, தாவரவியல் - 195, விலங்கியல் - 199, மொத்தம்-1139. 3-வது இடத்தை பிடித்த சர்வத்நவீனுக்கு அவரது தந்தை சையத்ஷாஜகான், தாயார் நுஜ்ரத்ஜஹான் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை முகஹிராபேகம், ஆசிரியர் ஷகிலாபானு மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், சகமாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். டாக்டர் ஆவேன் அதைத்தொடர்ந்து மாணவி சர்வத்நவீன் நிருபர்களிடம் கூறியதாவது:- விலங்கியல் பாடத்தில் மாவட்ட அளவில் முதல் இடம் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 3-வது இடம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனமாக கவனித்து, முக்கியமான பகுதிகளை குறித்து வைத்துகொள்வேன். தினமும் இரவு 11 மணி வரைக்கும், அதிகாலையில் 5 மணிக்கும் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர்கள், தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் என்னை சாதனை மாணவியாக உருவாக்கியது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். டாக்ருக்கு படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிளஸ்-2 தேர்வில் தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்ற எம்.ராகிலா பர்வீன் தஞ்சை அக்சீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ராகிலா பர்வீன் தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்- தமிழ்-191, ஆங்கிலம்-189, இயற்பியல்-195, வேதியியல்-199, கணினி அறிவியல்-198, கணிதம்-200. தஞ்சையை அடுத்த வல்லத்தில் வசிக்கும் ராகிலா பர்வீனின் தந்தை முகமது இஸ்மாயில் வியாபாரம் செய்து வருகிறார். தாய் பரிதா பேகம். மாணவி, ராகிலா பர்வீன் கூறியதாவது:- பள்ளியில் நல்ல பயிற்சி அளித்தார்கள். அடுத்து பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீரியங் படிக்க விருப்பம் உள்ளது.மாநில அளவில் பல்வேறு பாடங்களில் சாதனை படைத்த மாணவ மாணவிகள் பொருளியல் இரண்டாவது இடம்;ஏ.யாகியா (200), சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.நுண்ணுயிரியல் மூன்றாவது இடம்;ஓ.எப்.கதிஜா பவாஷா (198), சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை (வடக்கு)மனையியல் முதலிடம்1. ஏ.ரெபீஜா (190), பி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவை.உளவியல் முதலிடம் 1. ஏ.பதிமுத்து (172), அரசு மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி.உருது 1. எல்.வசீமா அம்ரீன் (195), நஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, பேரனாம்பட்டு, திருப்பத்தூர். 2. டி.முகமது சுகாய்ப் (195), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்விசாரம், வேலூர். 3. சையது சாதியா இக்ரம் (193), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர். அபிராமம் முசுலிம் மேல்நிலைப்பள்ளியின் சாதனைராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கே. சைனி, எம்.சரண்யா, ஜி.சந்தோஷ் கண்ணன் ஆகி யோர் சந்தையியல் மற்றும் விற்பனை திறனியல் பாடத்தில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சந்தையியல் மற்றும் விற் பனை திறனியல் பாடத்தில் முதல் இடம் பிடித்த மாணவி கே. சைனி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-149,ஆங்கிலம்-122, வணிகவியல்-151,சந்தையியல், விற்பனை திறனியல் கருத் தியல்- 191, செய்முறை 1 -200, செய்முறை 2-200, மொத்தம் -1013. இதில் சந்தையியல் மற் றும் விற்பனை திறனியலில் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில அளவிலான சாதனை குறித்து மாணவி கே. சைனி கூறியதாவது:- எனது தந்தை கருப்பையா தனுஷ் கோடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.தாய் முனியம்மாள். சொந்த ஊர் செட்டிகுளம். சட்டம் படித்து வக்கீல் ஆகவேண்டும் என்பது எனது லட்சியம். தடகள வீராங்கனையான எனக்கு பள்ளி தாளாளர் மற் றும் தலைவர் அகமது லத்தீப், பள்ளி செயலாளர் செய்யது இபுகிராம்,பள்ளி தலைமை ஆசிரியர் பசீர் அகமது, ஆசிரியர்கள் செல்வநாராயணன், ஷாஜகான் ஆகியோரும் தாய்,தந்தையும் உறுதுணை யாக இருந்து ஊக்கமளித் தால் மாநில அளவில் சாதனை படைக்கமுடிந்தது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 2-ம் இடம் 2-வது இடத்தை பிடித்த எம்.சரண்யா பாட வாரியாக பெற்ற மதிபெண்கள் வருமாறு:- தமிழ்-146,ஆங்கிலம்-112,வணிகவியல்-154,சந்தையியல்,விற்பனை திறனியல் கருத்தியல்-188,செய்முறை1-200,செய்முறை2-200, மொத்தம்- 1000. இதில் சந்தையியல், விற்பனைதிறனியல் 600க்கு 558 பெற்றுள்ளார். இவரது தந்தை மோகன், விவசாயி. தாய் ராமலட்சுமி. 3-வது இடம் இதேபோல சந்தையியல், விற்பனை திறனியல் பாடத் தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்த ஜி.சந்தோஷ் கண்ணன் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வரு மாறு:- தமிழ்-160, ஆங்கி லம்-94,வணிகவியல்-189, சந்தையியல்-விற்பனை திறனியல் கருத்தியல்-187, செய்முறை1- 200, செய்முறை2 -200.மொத்தம் -1030. இதில் சந்தையியல் விற்பனையியலில் 600க்கு 587 மதிப்பெண் பெற் றுள்ளார். இவரது தந்தை குரு சாமி ஓட்டலில் சர்வராக உள் ளார். தாய் கலாவதி. மாநில அளவில் சாதனை படைத்த மாணவ-மாணவி களை பள்ளிதாளாளர் மற் றும் தலைவர் அகமது லத் தீப், பள்ளி செயலாளர் செய்யது இபுகிராம்,பள்ளி தலைமை ஆசிரியர் பசீர் அகமது, ஆசிரியர்கள் செல்வ நாராய ணன், ஷாஜகான் ஆகியோர் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டத்தில்; 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ள முசுலிம் பள்ளிகள்சுபைதா மேல்நிலைப்பள்ளி, . எல்.கே.மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் சென்டிரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அல்அமீன் மெட்ரிக் பள்ளி (ஈரோடு 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளது.

No comments :